News April 18, 2025
இப்பிரச்னை இருக்கா.. தேங்காய் தண்ணீரை குடிக்காதீங்க!

சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.
Similar News
News December 19, 2025
தேனி: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் தண்டனை

போடி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவர் அதே பகுதியில் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த 2024 மே.8ல் செல்வராஜூவை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணை நேற்று முடிந்த நிலையில் செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்தும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.
News December 19, 2025
உலகின் டாப் 8 பணக்கார குடும்பங்கள் இவர்கள்தான்!

பணக்காரர்கள் என்றாலே அம்பானிகளும், அதானியும் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், உலக பணக்கார குடும்பங்களின் 2025 பட்டியலில் அம்பானி குடும்பமே 8-வது இடத்தில் உள்ளது. அம்பானியையே ஓரங்கட்டிய குடும்பங்களின் லிஸ்ட்டை மேலே கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து எந்த குடும்பம் உச்சத்தில் இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கோங்க. SHARE IT.
News December 19, 2025
விஜய்யின் பேச்சு.. ஏமாற்றத்தில் தவெக தொண்டர்கள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்கவில்லை என அரசியல் கட்சிகள் சாடியிருந்தன. மேலும், தேசிய அளவில் எதிரொலிக்கும் MGNREGA திட்டத்திற்கு மாற்றான <<18571984>>VB-G RAM G<<>> மசோதா பற்றியாவது ஈரோடு கூட்டத்தில் அவர் பேசுவார் என மக்களும், TVK தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், எத்தனை நிமிடங்கள் பேசணும், எதை பேசணும் என்பது தனக்கு தெரியும் என விஜய் கூறினார். இதனால் TVK தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.


