News April 18, 2025
இப்பிரச்னை இருக்கா.. தேங்காய் தண்ணீரை குடிக்காதீங்க!

சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.
Similar News
News November 14, 2025
நேருவின் பிறந்தநாளில் சறுக்கிய காங்கிரஸ்!

சுதந்திர இந்தியாவின் பெரும் அரசியல் ஆளுமையான இந்தியாவின் முதல் PM நேருவின் பிறந்தநாள் இன்று. ஆனால், அவரின் பெருமைகளை நினைவுகூரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இல்லை. இன்று வெளியாகி வரும் பிஹார் தேர்தல் முடிவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் MGB கூட்டணி 39 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது, காங்., 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. நேரு பிறந்தநாள், அவருடைய கட்சிக்கு சோக நாளாக மாறியுள்ளது!
News November 14, 2025
பிஹார் வெற்றி WB-லிலும் தொடரும்: கிரிராஜ் சிங்

பிஹாரில் NDA கூட்டணி 191 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவுக்கே உரியது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வெற்றி, தற்போது அராஜக ஆட்சி நடைபெறும் மே.வங்கத்திலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். CM மம்தா பானர்ஜி தலைமையிலான TMC ஆட்சி நடைபெறும் அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
News November 14, 2025
நீரிழிவு நோயை உண்டாக்கும் 7 பழக்கங்கள்!

இந்த பழக்கங்களின் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் ✦காலை நேர உணவை தவிர்ப்பது ✦ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது ✦குறைவான நேரம் தூங்குவது அல்லது முறையாக தூங்கும் பழக்கம் இல்லாதது ✦அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது ✦அதிக சர்க்கரையுள்ள பானங்கள் பருகுவது ✦உடல்பயிற்சியின்மை ✦அதிக மன அழுத்தம். இப்பதிவை அதிகளவில் பகிரவும்.


