News April 18, 2025
இப்பிரச்னை இருக்கா.. தேங்காய் தண்ணீரை குடிக்காதீங்க!

சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.
Similar News
News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு காரணம் இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதுதான் என கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காததால், அவர்கள் அனைவரும் பயத்திலேயே விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணியை சரியாக வழிநடத்தவில்லை என சாடிய அவர், ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு காரணம் இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதுதான் என கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காததால், அவர்கள் அனைவரும் பயத்திலேயே விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணியை சரியாக வழிநடத்தவில்லை என சாடிய அவர், ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 18, 2025
ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வேட்டை.. 31 பேர் கைது!

அண்டை மாநிலமான ஆந்திராவின் காக்கிநாடா, விஜயவாடாவில் 31 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய தளபதி உள்ளிட்ட <<18318822>>6 பேர் என்கவுண்டர்<<>> செய்யப்பட்டனர். மேலும், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


