News April 18, 2025
இப்பிரச்னை இருக்கா.. தேங்காய் தண்ணீரை குடிக்காதீங்க!

சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.
Similar News
News December 29, 2025
மும்பை மாநகராட்சி தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!

மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தாராவியை சேர்ந்த தமிழ்ப் பெண் மஞ்சுளா கதிர்வேல் வேட்பாளராக களமிறங்குகிறார். MH-ல் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-ல் தேர்தல் நடக்கிறது. மும்பையின் 227 வார்டுகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி, மஞ்சுளா உட்பட 15 வேட்பாளர்கள் கொண்ட 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் நிறைந்த மும்பை மாநகராட்சிக்கு சில நல்லவர்கள் தேவை என்றும் கூறியுள்ளது.
News December 29, 2025
5 குழந்தைகள் குத்திக் கொலை

தெற்கு அமெரிக்க நாடான சூரினாமின் Paramaribo-வில், மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே இரவில் 5 குழந்தைகள் உள்பட 9 பேர் மிக கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த முழுவிவரம் வெளியாகவில்லை. இதில் படுகாயமடைந்த வேறு சில நபர்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். So sad!
News December 29, 2025
மைக்கில் தொடங்கிய அப்பா – மகன் சண்டை

2024, டிச.28-ல் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் மைக்கை டேபிளில் எறிந்தார் அன்புமணி. அன்றிலிருந்து அப்பா – மகனுக்கிடையேயான அரசியல் இடைவெளி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. உச்சமாக நடப்பாண்டு ஏப்ரலில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, தானே பாமகவின் தலைவர் என ராமதாஸ் அறிவித்தார். கட்சி தலைவர் அன்புமணி தான் என ECI அங்கீகரித்துள்ள நிலையில், ராமதாஸ் சட்ட போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்.


