News April 18, 2025

இப்பிரச்னை இருக்கா.. தேங்காய் தண்ணீரை குடிக்காதீங்க!

image

சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.

Similar News

News December 13, 2025

மக்கள் நாயகன் காலமானார்… கண்ணீருடன் இரங்கல்

image

மனிதனுக்கு மனிதனே உதவ முன்வராத அவசர காலத்தில், கிளிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>ஜோசப் சேகர்<<>>(73) இப்போது பூவுலகில் இல்லை. புற்றுநோய் பாதிப்பால் மறைந்த அவர், பல்லாயிரக்கணக்கான கிளிகளை அனாதையாக விட்டுச் சென்றிருக்கிறார். ஜோசப் சேகரின் மறைவுக்கு அரசியல் கட்சிகள், பறவைகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த பறவை மனிதரின் வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

News December 13, 2025

வானம் விட்டு வந்த வெண்ணிலவே கீர்த்தி ஷெட்டி

image

கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், காலை நேர பனியாக சேலை, இதயம் பேச மறந்த வார்த்தையாக கம்மல், காற்றில் மிதக்கும் காதலாக கூந்தல், மலர்ந்த தாமரையாக முகம் என நடக்கும் கவிதையாக எழுதப்பட்டிருக்கிறார். வானம் விட்டு வந்த வெண்ணிலவு போல, சத்தமில்லாமல் பாடும் ராகமாக இருக்கிறார். உங்களுக்கும் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News December 13, 2025

சியா விதைகளை அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

image

ஆரோக்கியமான உணவுகளில் தவறாமல் இடம்பெறுவது சியா விதைகள். நன்மைகள் அதிகம் என்றாலும் அளவை மிஞ்சினால் பக்க விளைவுகளும் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். *அதிக நார்ச்சத்து செரிமான பிரச்னைகளை (வயிறு வலி, வீக்கம்) ஏற்படுத்தும் *விதைகள் உணவுக்குழாயில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம் *BP-யை குறைப்பதால், ஏற்கெனவே Low BP இருப்பவர்களுக்கு தலைசுற்றல் ஏற்படுத்தும் *சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.

error: Content is protected !!