News October 3, 2025
இந்த பழக்கங்கள் இருக்கா.. உடனே நிறுத்துங்க!

*சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை குறைக்கும் *போனை தலையணைக்கு அடியில் வைப்பது தூக்கத்தை குலைக்கும் *நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ரத்தம் உறையும் அபாயத்தை அதிகரிக்கும் *மிகவும் சூடாக உணவை சாப்பிடுவது உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் *Buds-ஐ காதில் போட்டு நோண்டுவது செவித்திறனை பாதிக்கும். சின்ன விஷயங்கள் என புறக்கணிக்க வேண்டாம். கவனமா இருங்க. SHARE IT.
Similar News
News October 4, 2025
கரூர் சம்பவத்தில் விஜய் என்ன தவறு செய்தார்?: H ராஜா

ஒட்டுமொத்த கரூர் சம்பவத்தில் விஜய் என்ன தவறு செய்தார் என்று H ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் காலதாமதமாக வந்தார் என்றால், அது எப்படி தவறாகும் என பேசிய அவர், 36 மணி நேரம் கழித்து வந்த MGR-ஐ பார்ப்பதற்கு மக்கள் காத்திருந்தனர் என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மீது தவறிருப்பதாகவும், கரூர் SP-ஐ சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
News October 4, 2025
சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த பொருள் போதும்

பாகற்காய் இலைகள் பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதில், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின், ஃபோலேட், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இது மலச்சிக்கலை குணப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சுகரை குறைக்கும். ஆனால், இதன் பலன்கள் ஒருவருக்கொருவர் வேறுபடும் என்பதால், சுகர் இருப்பவர்கள் மருத்துவர்களை கேட்டு இதை உணவில் சேர்க்கலாம் என கூறுகின்றனர். SHARE.
News October 4, 2025
அண்ணாமலை சென்ற விமானத்தில் சிக்கல்..

அண்ணாமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பதற்றம் உருவானது. சென்னையில் இருந்து மதுரை சென்ற இந்த விமானம் லேண்டாக வேண்டிய கடைசி நிமிடத்தில் மீண்டும் மேல் நோக்கி பறக்க தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகப்படியான வெப்ப அலை இருந்ததால் விமானம் தரையிறக்கப்படவில்லை. 13 நிமிடங்கள் கழித்து மீண்டும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.