News August 9, 2025

சளி என்று போனால் நாய்கடி ஊசி போடுகிறார்கள்: EPS

image

தற்போது அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸுகள், மருந்துகள் போதியளவில் இல்லை என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், சளி என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால் நாய்க்கடிக்கு ஊசி போடுவதாக விமர்சித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கையில்லாதவருக்கு கைகள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் காலோடு போனால் கால் இல்லாமலும், உயிரோடு போனால் உயிரில்லாமல் வருவதாகவும் சாடினார்.

Similar News

News August 10, 2025

மாநிலக் கல்விக் கொள்கை ஓர் குப்பைக் கொள்கை: அன்புமணி

image

மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள்தான் என்றும் அந்த வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான் எனவும் சாடியுள்ளார். தமிழக அரசு தன்னிச்சையாக வரைவு அறிக்கையை இறுதி செய்திருப்பதாகவும் குறை கூறியுள்ளார்.

News August 10, 2025

Online Shopping-ஆல் வரும் நோய்.. எச்சரிக்கும் டாக்டர்கள்!

image

டிஜிட்டல் உலகில் எது தேவை என்றாலும், ஆன்லைன் ஷாப்பிங் தான். ஆனால், அதனால், Compulsive Buying Disorder (CBD) என்ற மனநல பிரச்னை வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்றவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், நீண்ட நேரம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, கண் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம். எனவே, உஷாரா இருங்க!

News August 10, 2025

CBSE 9-ம் வகுப்பில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்

image

CBSE 9-ம் வகுப்பில் புத்தகம் பார்த்து தேர்வுகளை எழுத ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டில் மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடத் தேர்வுகளை பார்த்து எழுதலாம். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி வாழ்க்கைக்கான கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, 2020-ல் தேசிய கல்வி கொள்கையில்(NEP) பரிந்துரை செய்யப்பட்டது. உங்கள் கருத்து?

error: Content is protected !!