News April 28, 2025

16 திங்கட்கிழமை சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால்..

image

16 திங்கட்கிழமைகளில் சிவனை வழிப்படுவது, மனக்கஷ்டங்கள் நீங்க செய்யும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை மேற்கொள்ள, ஒவ்வொரு திங்கள் காலையிலும் நீராடி, சிவன் பார்வதிக்கு பூஜை செய்யவேண்டும். அன்று ஒரு நாள் உணவிற்கு பதிலாக பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பூஜைக்கு வில்வ இலைகள், செவ்வரளி மலர்கள், சங்கு பூக்களையும், நைவேத்தியமாக பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடலாம்.

Similar News

News December 1, 2025

BREAKING: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

image

கனமழை காரணமாக, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இதேபோல், நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

திமுகவின் குளறுபடியால் மாணவர்கள் அவதி: அன்புமணி

image

சென்னையில் இன்று கனமழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது தான் குழப்பங்களுக்கு காரணம் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிகளுக்கு லீவ் கொடுக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியிறுத்தியுள்ளார்.

News December 1, 2025

எப்படி சுனாமி வருகிறது?

image

கடலுக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால், கடல் சீற்றமடைந்து சுனாமி உருவாகிறது. பொதுவாக ரிக்டர் அளவில் 8.0 மேல் பூகம்பம் பதிவானால் மட்டுமே பெரியளவில் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுனாமி வருவதற்கு முன் கடல் நீர் 100-200 அடிகள் வரை உள்நோக்கி இழுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE.

error: Content is protected !!