News April 28, 2025

16 திங்கட்கிழமை சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால்..

image

16 திங்கட்கிழமைகளில் சிவனை வழிப்படுவது, மனக்கஷ்டங்கள் நீங்க செய்யும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை மேற்கொள்ள, ஒவ்வொரு திங்கள் காலையிலும் நீராடி, சிவன் பார்வதிக்கு பூஜை செய்யவேண்டும். அன்று ஒரு நாள் உணவிற்கு பதிலாக பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பூஜைக்கு வில்வ இலைகள், செவ்வரளி மலர்கள், சங்கு பூக்களையும், நைவேத்தியமாக பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடலாம்.

Similar News

News December 10, 2025

8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் காலை 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 15-ம் தேதி வரை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

உலகின் டாப் 10 அழகான நடிகைகள்

image

2025 நிறைவடைய உள்ள நிலையில், IMDB பட்டியலிட்டுள்ள இந்த ஆண்டின் டாப் 10 அழகான நடிகைகளை இங்கு பார்க்கலாம். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள நடிகைகளின் அழகை அலசி ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டும் இடம்பிடித்துள்ளார். இவர்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

News December 10, 2025

ஆணவக்கொலை வழக்கை இழுத்தடிக்கும் அரசு: கௌசல்யா

image

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கௌசல்யா குற்றஞ்சாட்டியுள்ளார். கொலைக்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து SC-யில் மேல்முறையீடு செய்தோம். அங்கு துணையாக நிற்க வேண்டிய அரசு மெத்தனப்போக்கு காட்டியது. நீதி கிடைத்தால் சாதிய வாக்குகள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வழக்கை இழுத்தடிக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!