News October 25, 2024
இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உறுப்பு சேதம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உணவகங்களில் 60% அளவுக்கு, பயன்படுத்திய எண்ணெயையே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. வட இந்திய நகரங்களை ஒப்பிடுகையில் சென்னை பரவாயில்லையாம். வடை, பஜ்ஜி, சமோசா, சில்லிசிக்கன் சாப்பிடுமுன் யோசிங்க, Pls!
Similar News
News September 14, 2025
விஜய்யை விட அஜித்துக்கு அதிக கூட்டம் வரும்: சீமான்

திருச்சி பிரசாரத்தில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை விட அஜித், ரஜினி, நயன்தாராவுக்கு அதிக கூட்டம் வரும் என சீமான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் எனவும், தான் சிறுவயதில் இருந்தபோது MGR, சிவாஜியை பார்க்க நின்ற தருணங்கள் உண்டு என்றும் கூறினார். நீங்க சொல்லுங்க, யாருக்கு அதிக கூட்டம் வரும்? அஜித்துக்கா? விஜய்க்கா?
News September 14, 2025
ஊறுகாய் போடுபவர் என்று விமர்சித்தனர்: நிர்மலா

ஊறுகாய் போடும் தனக்கு GST-யில் என்ன தெரியும் என்று விமர்சித்திருந்தாலும், மக்கள் நலனே தங்களது இலக்கு என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த GST விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அவர், ஒருநாள் PM மோடி தன்னை அழைத்து, GST குறித்து பல விமர்சனங்கள் வருவதால் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றார். எனவே, 8 மாதங்களாக பல கட்டங்களாக ஆராய்ந்து திருத்தங்களை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
News September 14, 2025
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்.. ரூல்ஸ் மாறுகிறது

ஐகோர்ட் உத்தரவின்படி நவ.30-ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நீலகிரி, வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அமலில் உள்ள இத்திட்டத்திற்கு மதுப்பிரியர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிகிறது. இதனால், மற்ற மாவட்டங்களில் சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.