News May 31, 2024
E-KYC செய்யாவிட்டால் நாளை முதல் மானியம் கிடையாது

உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையில் (₹300 குறைவாக) சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் சிலிண்டர் பெறுவோர், E-KYC கட்டாயம் செய்திருக்க வேண்டும். அதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், E-KYC செய்து முடிக்காத பயனாளர்களுக்கு நாளை முதல் மானிய விலையில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
‘அம்மா, அப்பா நான் சாகப்போறேன்’.. சோக முடிவு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேறியுள்ள நிலையில், லக்னோவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். ‘எனது விளையாட்டால் நீங்கள்(பெற்றோர்) கவலை அடைந்துள்ளீர்கள். எனது மரணத்திற்கு யாரையும் குறை கூறவில்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்து கொள்ளுங்கள் என உருக்கமான கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளான். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 22, 2025
இனி இ-பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்

<<16434322>>இ-பாஸ்போர்ட்<<>> சேவை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இதற்கு முதலில் இ-பாஸ்போர்ட் இணையதளத்தில் அப்பாயின்மென்ட் பெற்று, பின் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வெரிபிகேஷனை முடிக்க வேண்டும். இது வழக்கமான பாஸ்போர்ட்டின் அப்கிரேட் வெர்ஷன் தான். ஆனால், அதற்கு மாற்று கிடையாது. பயோமெட்ரிக் தகவல்கள் கொண்ட சிப் பொருத்தப்பட்டுள்ளதால் இது பாஸ்போர்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
News August 22, 2025
துரோகம் செய்த நடிகர்: டைவர்ஸ் கேட்கும் மனைவி

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா- சுனிதா தம்பதியர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண பந்தத்தில் 37 ஆண்டுகள் இணைந்திருந்த நிலையில், இளம்நடிகை ஒருவருடன் கோவிந்தா நெருங்கிப் பழகுவதாக தகவல் வெளியானதிலிருந்து கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. இந்நிலையில், சுனிதா விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. திரைத்துறையில் விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்?