News March 24, 2025
இதை செய்தால் 60% மின்சாரத்தை சேமிக்கலாம்!

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வீடுகளில் AC பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், மின்சாரப் பயன்பாடும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், 5 Star தரம் வாய்ந்த ACகளைப் பயன்படுத்தினால் 60% வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ACக்களை பயன்படுத்தினால், 40-50% அதிக மின்சாரம் செலவாகும் எனவும், 24°Cல் ACயை பயன்படுத்துவதே சிறந்தது என்கின்றனர்.
Similar News
News December 16, 2025
சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 16, 2025
BREAKING: பள்ளியில் மாணவன் மரணம்.. தமிழகத்தில் துயரம்

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித், பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து தலைமீது விழுந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மாணவனின் உயிர் பிரிந்தது. உறவினர்கள் மோகித்தின் உடலை கையில் ஏந்தி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.
News December 16, 2025
தர்காவின் இடத்தில்தான் தூண் உள்ளது: வக்ஃபு வாரியம்

தீபத்தூண் என கூறப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக வக்ஃபு வாரிய தரப்பு தெரிவித்துள்ளது. <<18509407>>திருப்பரங்குன்றம்<<>> வழக்கின் மீதான இன்றைய விசாரணையில், மனுதாரரின் இந்த மனுவால் தூண் யாருக்கு சொந்தம், நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை உருவாகியுள்ளதாகவும் வக்ஃபு வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தர்கா சர்வே தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை HC அமர்வு உத்தரவிட்டுள்ளது.


