News August 31, 2025
ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்..

காலையில் சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஏதாவது இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்று சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும். SHARE IT.
Similar News
News September 1, 2025
திங்கள்கிழமையில் சிவனின் முழு அருள் கிடைக்க..

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
இந்த மந்திரத்தை சிவனுக்கு உகந்த தினமான திங்கள்கிழமையில் சொல்லி வழிபட்டால், வாழ்க்கையில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். SHARE IT.
News September 1, 2025
அச்சாணியாக புதிய தமிழகம் கட்சி: கிருஷ்ணசாமி

சமீப காலமாகவே தவெகவை அரவணைத்துச் செல்வது போன்றே கிருஷ்ணசாமியின் பேச்சு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதியாக வரும் என்று தெரிவித்துள்ள அவர், அந்த ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அச்சாணியாக விளங்கும் என்று கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 1, 2025
பன்னாட்டு தலைவர்களுடன் மோடி பரஸ்பர நல்லுறவு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் PM மோடி கலந்துகொண்டார். அப்போது, நேபாளம், மாலத்தீவு, எகிப்து, பெலாரஸ், டஜிகிஸ்தான், கஜகஸ்தான், வியட்நாம், துர்க்மெனிஸ்தான், Lao PDR, மியான்மர், அர்மேனியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர், பிரதமர்களை பரஸ்பர மரியாதையுடன் மோடி சந்தித்தார். இதன் மூலம் அந்த நாடுகளுடனான உறவு வலுப்படும் என்றும் PM தெரிவித்துள்ளார்.