News August 17, 2024

சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தால்…

image

சிறுநீரை நேரம் தாழ்த்தாமல் கழித்து விட வேண்டும். இல்லையேல் கீழ்காணும் 5 பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 1) சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகும் 2) சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட வழிவகுக்கும் 3) சிறுநீர் பை சுமை தாங்க முடியாமல் சேதமாகும் 4) சிறுநீரை தேக்கி வைக்கும் சிறுநீர் பையில் வலி உருவாகும் 5) இடுப்புப் பகுதி தசைகளை பலவீனமாக்கும்.

Similar News

News December 5, 2025

14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் மறக்காமல் குடை எடுத்துட்டு போங்க..

News December 5, 2025

DRDO-வில் 763 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

DRDO-வின் பணியாளர் திறன் மேலாண்மை மையம் 763 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 561 senior technical assistant-B, 203 technician-A பணியிடங்கள் அடங்கும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு வரும் டிச.9-ம் தேதி முதல் www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News December 5, 2025

550 விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்ட இண்டிகோ

image

புதிய விமானப் பணிநேர வரம்பு விதிகளை, பின்பற்றிட இண்டிகோவிடம் போதிய விமானிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், நேற்று 550 விமானங்களின் சேவையை இண்டிகோ ரத்து செய்தது. இதற்காக விமானப் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ, இப்பிரச்னையை சரிசெய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பிப்.10 வரை விதிகளில் இருந்து தளர்வு கோர இண்டிகோ முடிவெடுத்துள்ளது.

error: Content is protected !!