News August 17, 2024

சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தால்…

image

சிறுநீரை நேரம் தாழ்த்தாமல் கழித்து விட வேண்டும். இல்லையேல் கீழ்காணும் 5 பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 1) சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகும் 2) சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட வழிவகுக்கும் 3) சிறுநீர் பை சுமை தாங்க முடியாமல் சேதமாகும் 4) சிறுநீரை தேக்கி வைக்கும் சிறுநீர் பையில் வலி உருவாகும் 5) இடுப்புப் பகுதி தசைகளை பலவீனமாக்கும்.

Similar News

News December 3, 2025

9 மில்லியன் Followers-ஐ இழந்த ரொனால்டோ!

image

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ X தளத்தில் 9 மில்லியன் Followers-ஐ இழந்துள்ளார். நவம்பரில் 115 மில்லியன் Followers இருந்த நிலையில், அது 105 மில்லியனாக குறைந்துள்ளது. நவம்பரில் ரொனால்டோ – டிரம்ப் சந்திப்பை தொடர்ந்து, டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளவர்கள், ரொனால்டோவை Unfollow செய்திருப்பார்கள் என கூறப்பட்டாலும், X தளத்தில் Fake ID-க்கள் நீக்கப்பட்டதே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

News December 3, 2025

BREAKING: ‘ரோடு ஷோ’ முடிவை மாற்றினார் விஜய்

image

புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருந்த விஜய், தனது முடிவை மாற்றியுள்ளார். தொடர் மழை காரணமாக ‘ரோடு ஷோ’ திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி இல்லை எனவும், வேண்டுமானால் திடலில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் என <<18447638>>அம்மாநில காவல்துறை<<>> கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

News December 3, 2025

டாக்டர்கள் ஏன் நாக்கை நீட்ட சொல்கிறார்கள்?

image

எந்த ஒரு பிரச்னைக்காக ஹாஸ்பிடல் சென்றாலும், டாக்டர்கள் முதலில் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்பார்கள். அது ஏன் என யோசித்தது உண்டா? நாக்கின் தன்மையை வைத்தே உடல் ஆரோக்கியத்தை அறியலாம். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், நாக்கு மஞ்சள் நிறத்திலிருக்கும். உடலில் ரத்த சோகை இருந்தால், நாக்கு வறண்டு போகும். நோய்த்தொற்று அதிகமாக இருந்தால், நாக்கு வெள்ளையாக மாறும். தைராய்டு இருந்தால், நாக்கு பெரிதாகும்.

error: Content is protected !!