News August 17, 2024
சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தால்…

சிறுநீரை நேரம் தாழ்த்தாமல் கழித்து விட வேண்டும். இல்லையேல் கீழ்காணும் 5 பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 1) சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகும் 2) சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட வழிவகுக்கும் 3) சிறுநீர் பை சுமை தாங்க முடியாமல் சேதமாகும் 4) சிறுநீரை தேக்கி வைக்கும் சிறுநீர் பையில் வலி உருவாகும் 5) இடுப்புப் பகுதி தசைகளை பலவீனமாக்கும்.
Similar News
News November 26, 2025
இவர்களெல்லாம் சுக்கு மல்லி காபி குடிக்கக்கூடாது

சுக்கு, மல்லி, மிளகு, கருப்பட்டி ஆகியவற்றை இடித்து, நன்றாக கொதிக்க வைத்து குடிக்கும் சுக்கு மல்லி காபியால் பல நன்மைகள் இருந்தாலும், அதனை ஒரு சிலர் தொடர்ந்து குடிப்பது நல்லதல்ல. நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப்போக்கு அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 1 (அ) 2 முறை மட்டுமே பருகலாம் என டாக்டர்கள் கூறுகின்றன. மேலும், அறுவை சிகிச்சைகளுக்கு முன்பும் குடிக்கக்கூடாது. Share it.
News November 26, 2025
தமிழகம், கேரளாவுக்கு பட்டை நாமம்: சு.வெங்கடேசன்

2024-25-ம் ஆண்டில் புதிய ரயில்வே வழித்தடத்திற்கு ₹31,458 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக MP சு.வெங்கடேசன் சாடியுள்ளார். மொத்த தொகையில் 1%-ஐ மட்டுமே ஒதுக்கிவிட்டு, தமிழகம், கேரளாவுக்கு மத்திய அரசு பட்டை நாமம் போட்டு விட்டதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
இன்று மதியம் புயல் உருவாகிறது

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) மதியம் புயலாக தீவிரமடையும் என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, தென் & வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.


