News August 17, 2024
சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தால்…

சிறுநீரை நேரம் தாழ்த்தாமல் கழித்து விட வேண்டும். இல்லையேல் கீழ்காணும் 5 பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 1) சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகும் 2) சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட வழிவகுக்கும் 3) சிறுநீர் பை சுமை தாங்க முடியாமல் சேதமாகும் 4) சிறுநீரை தேக்கி வைக்கும் சிறுநீர் பையில் வலி உருவாகும் 5) இடுப்புப் பகுதி தசைகளை பலவீனமாக்கும்.
Similar News
News December 1, 2025
தேனி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

தேனி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
தேனி – 04546-255133
பெரியகுளம் – 04546-231215
ஆண்டிப்பட்டி – 04546-242234
உத்தமபாளையம் – 04554-265226
போடிநாயக்கனூர்- 04546-280124
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News December 1, 2025
நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் நிடிமொரு திருமணம் (PHOTOS)

நடிகை சமந்தா, பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வந்த நிலையில், இன்று காலை கோவையில் அவரை திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற திருமண விழாவின் புகைப்படங்களை சமந்தா சற்றுமுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News December 1, 2025
ராஜ்யசபா புதிய உயரத்தை எட்டும்: தம்பிதுரை

ராஜ்யசபாவில் பேசிய அதிமுக MP தம்பிதுரை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். மேலும், ‘உங்கள் தலைமைப்பண்பால் ராஜ்யசபா சிறந்த நாள்களை காணும் என நம்புகிறேன். அது, இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்கு அழைத்து செல்லும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பிரச்னைகளை பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


