News March 27, 2024
“அதிக வாக்கு வாங்கி கொடுத்தால் 10 சவரன் நகை”

தி.மலை மாவட்டம் போளூரில், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது “ஆரணி தொகுதியை உள்ளடக்கிய 6 சட்டமன்றத் தொகுதியில் எந்த தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்று தருகிறார்களோ, அந்த சட்டமன்றத் தொகுதியை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்களுக்கு 10 சவரன் நகை வழங்கப்படும்” என அறிவித்தார்.
Similar News
News March 31, 2026
விஜய் Vs உதயநிதி… பாதுகாப்பில் பாரபட்சமா?

விஜய்யின் கொளத்தூர் பிரசாரத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பு EC-யிடம் புகார் அளித்துள்ளது. அதற்கு பதிலடியாக திருவண்ணாமலையில் பெரும் கூட்டத்திற்கு நடுவே DCM உதயநிதி பிரசாரம் செய்ததை திமுகவினர் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இருவரின் பிரசார வாகனங்களின் முன் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, இதுதான் சமமான பாதுகாப்பா என தவெகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
News March 31, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை (ஏப்.1) தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
News March 31, 2026
திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்ய விஜய் தயார்!

2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய் நேற்று பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை மறுநாள் பிரசாரம் செய்ய ECI-யிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. காலையில் மனுதாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். பெரம்பூரில் அவருக்கு சரியான போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.


