News April 2, 2024

இருவர் ஒரே ரன்கள் எடுத்தால், ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

image

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி வீரர் விராட் கோலி, ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் இருவரும் அதிக ரன்கள் (181) எடுத்துள்ளனர். ஐபிஎல் விதிகளின்படி இரண்டு வீரர்கள் ஒரே அளவு ரன்கள் எடுத்திருந்தால், அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ளவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும். இதன்படி பராக் 160.17 ஸ்ட்ரைக் ரேட்டும், விராட் கோலி 141.40 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளனர். இதன் காரணமாக பராக்கிற்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டில் சிக்குவார்கள்: ராகுல்

image

மோடியும், அமித் ஷாவும் ஒருபோதும் நியாமான முறையில் தேர்தலில் வெற்றி பெற்றது இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். EC ஆணையருக்கும் வாக்கு திருட்டில் தொடர்புள்ளதாகவும், மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டு விவகாரத்தில் இருந்து தப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பல மாநிலத்தில் வாக்குதிருட்டின் மூலம் வெற்றிபெற்ற பாஜக, பிஹாரிலும் அதேபோன்று வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதாக கூறினார்.

News November 10, 2025

வெள்ளை முடி இருக்கா? அப்போ நல்லது தான்!

image

தலைமுடி நரைப்பதும் ஒருவகையில் நல்லது என்கின்றனர் ஜப்பானிய விஞ்ஞானிகள். கேன்சரை உண்டாக்கும் செல்களை உடல் அழிக்கும் செயல்முறையில், முடி நிறம் இழப்பதாக கூறுகின்றனர். மெலனோசைட்கள் என்ற செல்கள் தான், நம் தலைமுடி கருநிறமாக இருப்பதற்கு காரணம். கேன்சரை ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் செயல்பாட்டின் போது, இவை தங்களை தாங்களே அழித்துக் கொள்வதால், முடி நிறம் இழக்கிறதாம். ஆகவே, கிரே ஹேர் பார்த்து கவலைபடாதீங்க.

News November 10, 2025

திமுக ஆட்சிக்கு முடிவுகட்டும் நடைபயணம்: அன்புமணி

image

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என தனது நடைபயணத்தின் 100-வது நாள் விழாவில் அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே இந்த மக்கள் சந்திப்பின் நோக்கம் என்றார். பல தடைகளை தாண்டி இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும், இதில் பல மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!