News April 27, 2024
உணவில் உப்பு அதிகமானால்…

*உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் *உயர் இரத்த அழுத்தத்துக்கு (BP) அதிகமான உப்பு முதன்மை காரணம் *உப்பு அதிகமானால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், இதனால் நோய்கள் அதிகரிக்கும் *குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது *ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது *அதேநேரம் உடலுக்கு குறைந்த அளவு உப்பு தேவை.
Similar News
News March 9, 2026
ChatGPT-யிடம் கேட்டு எக்ஸாம் எழுதிய மாணவர்கள்!

டீச்சர்கள் எக்ஸாமில் பிட் அடிக்க உதவியது தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. மகாராஷ்டிராவின் 10 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் ChatGPT-யை பயன்படுத்தி தேர்வு எழுதியுள்ளனர். பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த 81 டீச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே எக்ஸாம் செண்டரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 9, 2026
தமிழ்நாட்டின் எதிரி யார் என்று தெரியும்: CM ஸ்டாலின்

வரும் தேர்தல் எப்படி தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தலாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்துக்கு CM ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திருச்சி மாநாட்டில் பேசிய அவர், தமிழ் மொழி, தமிழ் பண்பாட்டின் ஒரே எதிரி யார் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும் திராணியும் திமுகவுக்கு மட்டும்தான் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 9, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் எப்போது? முக்கிய அப்டேட்

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகுமாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


