News December 5, 2024
உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்…

உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். இது குறித்து வைகோ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “செமஸ்டர் தேர்வுகளுக்கான திட்டம் உள்பட, மாணவர்களை சேர்க்கை கொள்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு திட்டத்தை உயர் கல்வி நிறுவனங்கள் கவனமாகத் தயாரிக்க வேண்டும்” என்றார்.
Similar News
News August 23, 2025
தோனி, ரிஷப்பை விட நானே சிறந்தவன்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பற்றிய கேள்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் தோனியின் பெயரை கூற மறுத்திருக்கிறார். ஜூனியர் அகாடமி வீரர்களுடன் உரையாடிய அவர் தோனி, ரிஷப் பண்ட்-ஐ விட தானே சிறந்த கீப்பர் என நகைச்சுவையாக கூறினார். மேலும் அணியில் யாராவது டக் அவுட் ஆகினால் கன்னத்தில் அறைந்துவிடுவேன் என சிறுவர்களிடம் கலகலத்தார். தோனி ஓய்வு பெற்றால் ஒரு வேளை CSK கீப்பர் ருதுராஜ் தானா?
News August 23, 2025
தென்னகத்தின் அன்பே என்னை மாற்றியது: அனுராக் காஷ்யப்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டை ‘டாக்ஸிக்’ உலகம் என விமர்சித்திருந்தார் அனுராக் காஷ்யப். இந்நிலையில், பாலிவுட் உலகம் தன்னை தொடர்ந்து புறக்கணித்ததாக கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது குடிப்பழக்கத்தை பாலிவுட் குறைகூறிக் கொண்டே இருந்ததாக கூறிய அவர், தென்னகத்தின் அன்பால் குடியை நிறுத்தியது மட்டுமல்லாமல், உடற்பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 23, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு வழங்குவது உறுதி?

<<17486137>>ரேஷன் கார்டுக்கு ₹5,000<<>> வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.