News August 5, 2025

அமளி நீடித்தால் விவாதமே கிடையாது: கிரண் ரிஜிஜூ

image

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி, நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

image

நேற்று உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,585 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் குறைந்து 24,611 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மீண்டும் டிரம்ப் வரியை உயர்த்த உள்ளதாக எச்சரித்துள்ளதால் அதன் தாக்கம் பங்குசந்தையில் நிலவுவதாக கூறப்படுகிறது.

News August 5, 2025

சற்றுமுன்: நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை

image

ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

ஓரணியில் தமிழ்நாடு.. அழைப்பு விடுத்த திமுக

image

தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைய வேண்டும். நம் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆக.11,12-ல் ஸ்டாலின், கோவை, திருப்பூரில் ஆய்வு செய்யவிருக்கும் நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!