News April 15, 2024
ஆட்சி தொடர்ந்தால் வங்கியில் பணம் வரும்…

பாஜக ஆட்சி தொடர்ந்தால் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையை விவரித்தார். பாஜகவின் ஆட்சி தொடர்ந்தால் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிசான் நிதி தொடர்ந்து வரும். முதியவர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என்றார்.
Similar News
News December 5, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது அப்டேட்

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசுத் தொகை வழங்கவில்லை. ஆனால், 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, டிச.12-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களின் வங்கி கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News December 5, 2025
பெண்களின் Safety-க்காக போனில் இருக்கும் 2 ட்ரிக்ஸ்!

✱Setting-ல் ‘Emergency SOS’ ஆப்ஷனை ஆன் செய்யுங்க. உறவினர் or நண்பரின் Contact-டை Save பண்ணுங்க. போனின் பவர் பட்டனை 3 முறை அழுத்தினால், உங்க Live location போலீஸ் கன்ட்ரோல் ரூம் & Emergency Contact-க்கு மெசேஜ் சென்றுவிடும் ✱India 112 ஆப்- எந்த ஆபத்தாக இருந்தாலும் சரி, இந்த ஆப்பில் ஒரு கிளிக் செய்தால் போதும், 5- 10 நிமிடங்களில் போலீஸ் உதவ வந்துவிடும். இந்த பதிவை அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
வீடு தேடி வரும் ஐயப்ப பிரசாதம்! எப்படி வாங்குவது?

வீட்டில் இருந்தே அரவணை பாயாசம் பெறுவதற்கான ஏற்பாட்டை சபரிமலையில் உள்ள தபால் அலுவலகம் செய்துள்ளது. வீட்டருகே உள்ள தபால் நிலையத்தில், இதற்கான பணத்தை கட்டினால், சில தினங்களில் பிரசாதம் வீடு தேடி வரும். ஒரு டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டை வாங்க ₹520 செலுத்த வேண்டும். இதில் நெய், அரவணை, மஞ்சள், குங்குமம், விபூதி & அர்ச்சனை பிரசாதம் இருக்கும். 4 டின்னுக்கு ₹960 & 10 டின்னுக்கு ₹1,760 செலுத்த வேண்டும்.


