News April 15, 2024
ஆட்சி தொடர்ந்தால் வங்கியில் பணம் வரும்…

பாஜக ஆட்சி தொடர்ந்தால் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையை விவரித்தார். பாஜகவின் ஆட்சி தொடர்ந்தால் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிசான் நிதி தொடர்ந்து வரும். முதியவர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என்றார்.
Similar News
News December 5, 2025
BREAKING: செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

புதுச்சேரியில் டிச.9-ல் பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள WAR ROOM-ல் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இனி பொதுக்கூட்டமாகவே பரப்புரையை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரை தவெகவில் இணைப்பது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.
News December 5, 2025
சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: TN அரசு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை HC-ன் உத்தரவை எதிர்த்து SC-ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் ஏற்ற கோருவதாகவும், அவ்விடம் தர்காவுக்கு 15 மீ தொலைவில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மதுரை HC உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், தேவையற்ற சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி தரவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
News December 5, 2025
BREAKING: இன்று அனைத்து பள்ளிகளுக்கும்.. வந்தது உத்தரவு

இன்று அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, மாணவர்களுக்கான அரசுத் திட்டங்களை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.


