News March 18, 2024
தவறான தகவல் பரப்பினால்: கலெக்டர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷரவன்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லோக்சபா தொகுதியில் உள்ள பகுதிகளில் தேர்தலை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 11, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 433 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.10) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 424 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 9 மனுக்களும் என மொத்தமாக 433 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 10, 2025
கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன் ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


