News October 30, 2025

PM மோடிக்கு தைரியம் இருந்தால்.. ராகுல் விட்ட சவால்

image

இந்திரா காந்தி என்ற பெண், மோடி என்ற ஆணை காட்டிலும் தைரியமானவர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 1971 போரின் போது இந்தியாவை மிரட்ட USA கப்பல்படையை அனுப்பியதாகவும், ஆனால் அப்போதைய PM இந்திரா காந்தி, அதற்கு அச்சப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடிக்கு உண்மையில் தைரியம் இருந்தால், போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் சொல்வது பொய் என கூறட்டும் என்றும் சவால் விட்டுள்ளார்.

Similar News

News October 30, 2025

USA தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு

image

ஈரான் சபாஹர் துறைமுகம் மீதான அமெரிக்க தடைகளில் இருந்து இந்தியாவிற்கு 6 மாதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சபாஹர் துறைமுகமானது இந்தியா – ரஷ்யா – ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சர்வதேச வழித்தடமாகும். இதில் இந்தியா பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது.

News October 30, 2025

யார் இந்த புதிய CJI சூரியகாந்த்?

image

53-வது CJI-ஆக நியமிக்கப்பட்டுள்ள <<18152053>>சூர்யகாந்த்<<>>, ஹரியானாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். 1984-ல் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர். இமாச்சல் தலைமை நீதிபதியாகவும், ஹரியானா & பஞ்சாப் ஐகோர்டில் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியவர். வரும் நவ., 24 முதல் 2027 பிப்., 9-ம் தேதி வரை CJI-ஆக பணியாற்ற உள்ளார். அரசியல், தேர்தல் நடைமுறை சார்ந்த பல முக்கிய வழக்குகள் இவரது பணிக்காலத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

News October 30, 2025

‘சக்தித் திருமகன்’ திருட்டு கதையா?

image

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!