News October 21, 2024
அதிக கட்டணம் வசூலித்தால்… இந்த எண்ணை அழையுங்கள்!

தீபாவளி நேரத்தில் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 1800 425 6151, 9445014436, 044-2474 9002 / 2628 0445/ 2628 1611 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம். பயணிகளின் வசதிகளுக்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
FLASH: கி.வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி(91) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி, மயக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News July 6, 2025
மீன்களின் விலை குறைவு.. அலைமோதும் மக்கள் கூட்டம்!

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது. சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சென்னையில் மீன்கள் விலை குறைந்து 1 கிலோ நெத்திலி- ₹150, சீலா- ₹350, இறால்- ₹300, சங்கரா மீன்- ₹150, மத்தி- ₹100, வஞ்சிரம்- ₹700, நண்டு- ₹150, வாவல் மீன்- ₹500-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் நாகையில் மீன்கள் விலை சற்று அதிகரித்துள்ளது.
News July 6, 2025
பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்: PM மோடி

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என டிரினிடாட் & டொபாகோ பார்லிமென்ட்டில் PM மோடி பேசியுள்ளார். அவையில் பெண் MP-க்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கான மரியாதை ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்றும் கூறினார். அடுத்த லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வருகிறதோ?