News April 10, 2024
சீனப் பகுதிகளுக்கு இந்தியா புதிய பெயர் வைத்தால்…

சீனப் பகுதிகளுக்கு இந்தியா புதிய பெயர்களை வைத்தால், அது இந்தியாவுக்கு சொந்தமாகி விடுமா என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல் மாநிலத்தை உரிமை கொண்டாடும் சீனா, அண்மையில் அந்த மாநிலத்திலுள்ள பகுதிகளுக்கு புதிய பெயர் வைத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், சீனா பெயர் வைத்தால், அது சீனப் பகுதிகளாகி விடாது, எப்போதும் இந்திய பகுதிகள்தான் என்றார்.
Similar News
News April 10, 2026
திருப்பத்தூர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.
News April 10, 2026
ஆசிரியர்கள் அதிர்ச்சி.. அறிவித்தது தமிழக அரசு

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், தேர்வுமுடியும் வரையே பணிநீட்டிப்பு என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரலுடன் முடிவடைவதால், ஓய்வுபெறுவோருக்கு மே மாதம் சம்பளம் கிடைக்காது. 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுதான் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
News April 10, 2026
ஆசிரியர்கள் அதிர்ச்சி.. அறிவித்தது தமிழக அரசு

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், தேர்வுமுடியும் வரையே பணிநீட்டிப்பு என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரலுடன் முடிவடைவதால், ஓய்வுபெறுவோருக்கு மே மாதம் சம்பளம் கிடைக்காது. 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுதான் இது நடைமுறைக்கு வந்துள்ளது.


