News May 29, 2024

அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்

image

கடந்த சில தினங்களாக பாஜகவைச் சேர்ந்த பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் எனக் கூறி வருகின்றனர். மேலும், ஜெயலலிதா கரசேவைக்கு ஆள்களை அனுப்பினார் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசை கூறுவது பொய்யான கருத்து. அவர் கூறியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் எனக் கூறியுள்ளார்.

Similar News

News August 21, 2025

தடகளம்: பதக்கங்களை குவிக்கும் தமிழக வீரர்கள்

image

64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான போல் வால்ட்டில் கவுதம், ரீகன், கமல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று புது சாதனை படைத்துள்ளனர். 100 மீ ஓட்டத்தில் தமிழரசு, ராகுல் ஆகியோர் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மகளிருக்கான 100 மீ ஓட்டத்தில் தனலெட்சுமி, அபிநயா ராஜராஜன் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

News August 21, 2025

பெரிய வாக்கு வங்கி மதிமுகவுக்கு இல்லை: வைகோ

image

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பெயர் இடம்பெறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக வைகோ கூறியுள்ளார். திருவான்மியூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி நீடிக்கும் என்றார். திமுகவுக்கு இருக்கும் பெரிய வாக்கு வங்கி மதிமுகவுக்கு இல்லை என்றாலும், மதிமுக தொண்டர்கள் வீரர்கள் போல் உறுதியானவர்கள் என தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் மதிமுகவின் செல்வாக்கு உயருமா?

News August 21, 2025

செயலற்று கிடக்கும் 13 கோடி ஜன்தன் கணக்குகள்!

image

நாட்டில் மொத்தமுள்ள 56.03 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில், ஜூலை 31-ம் தேதி கணக்குப்படி, 13.04 கோடி கணக்குகள்(23%) செயலற்று இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 2.75 கோடி கணக்குகளும், பிஹாரில் 1.39 கோடி கணக்குகளும் செயலற்று உள்ளன. 2 வருடங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கி கணக்கு இருந்தால், அது செயலற்றதாக மாறும் என்பது RBI விதி.

error: Content is protected !!