News March 24, 2025

கல்வி RSS கைக்கு சென்றால் நாடு அழிந்துவிடும்: ராகுல்

image

கல்வியை RSS கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அவர், RSS கையில் கொஞ்சம் கொஞ்சமாக கல்விமுறை செல்வதாகவும், அப்படி சென்றால் யாருக்கும் வேலை கிடைக்காது எனவும் எச்சரித்தார். வேலையின்மை குறித்து பிரதமர் பேசுவதே இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

Similar News

News December 1, 2025

சற்றுமுன்: விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

image

கார்த்திகை தீபத்தையொட்டி டிச.3-ல் தி.மலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் கண்டு மகிழும் இந்த விழாவிற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை, நாளை மறுநாளில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தி.மலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. TNSTC செயலி, www.tnstc.in இணையதளம் மூலம் டிக்கெட் புக் பண்ணலாம்.

News December 1, 2025

சமந்தாவின் கணவர்.. யார் இந்த ராஜ் நிடிமொரு?

image

<<18437853>>சமந்தாவை<<>> கரம் பிடித்துள்ள ராஜ் நிடிமொரு திருப்பதியில் பிறந்தவர். இயக்குநர் DK உடன் இணைந்து பாலிவுட்டில் பல வெற்றி படங்களை ராஜ் இயக்கியுள்ளார். 2009-ல் ’99’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ராஜ், தொடர்ந்து ‘Go Goa Gone’, ‘A gentleman’ போன்ற படங்களை இயக்கினார். சமந்தா நடித்த ‘The Family man’ சீரிஸ், ‘Citadel: Honey Bunny’ போன்ற வெப் தொடர்களும் அவர் இயக்கியதுதான்.

News December 1, 2025

நெல் ஈரப்பத அளவை TN அரசு உயர்த்த சொல்வது ஏன்?

image

மத்திய அரசின் தரக்குறியீட்டின்படி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 17% இருக்கவேண்டும். ஆனால், தற்போது பருவமழை காலம் என்பதால் குறுவை நெல்லின் ஈரப்பதம் 17% விட அதிமாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நெல் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அது தரமற்றதாக கருதப்படும். எனவே விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஈரப்பத அளவை 22% வரை உயர்த்த TN அரசு கோரிக்கை வைத்துவருகிறது.

error: Content is protected !!