News March 24, 2025
கல்வி RSS கைக்கு சென்றால் நாடு அழிந்துவிடும்: ராகுல்

கல்வியை RSS கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அவர், RSS கையில் கொஞ்சம் கொஞ்சமாக கல்விமுறை செல்வதாகவும், அப்படி சென்றால் யாருக்கும் வேலை கிடைக்காது எனவும் எச்சரித்தார். வேலையின்மை குறித்து பிரதமர் பேசுவதே இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
Similar News
News December 3, 2025
உள்ளாட்சி தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்

டிச.9, 11-ல் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இடுக்கி, பாலக்காடு, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பொறுப்பாளர்களை EPS நியமித்துள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் போன்ற அப்பகுதியில் வலுவானவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
News December 3, 2025
அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசிய OPS

அவசரப் பயணமாக நேற்று டெல்லி சென்ற OPS அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் TN அரசியல் சூழல் குறித்து பேசியதாக OPS தெரிவித்துள்ளார்.<<18381772>> EPS-க்கு 15-ம் தேதி<<>> வரை அவர் கெடு விதித்திருக்கும் நிலையில், நடந்த இந்த சந்திப்பு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சந்திப்புக்கு பின் OPS-ன் அரசியல் வியூகம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
News December 3, 2025
இந்தியா வரும் புடின்.. 4 டஜன் ஆட்களை இறக்கிய ரஷ்யா

ரஷ்ய அதிபர் புடின் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. NSG கமாண்டோக்கள், ஸ்னைப்பர்ஸ், டிரோன்கள், AI கண்காணிப்பு என 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதுதவிர 40-க்கு மேற்பட்ட ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளும் டெல்லி வந்துள்ளனர். முக்கியமாக, <<18411863>>புடின்<<>> பயன்படுத்தும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட Aurus Senat சொகுசு காரும் இந்தியா வருகிறது.


