News March 24, 2025
கல்வி RSS கைக்கு சென்றால் நாடு அழிந்துவிடும்: ராகுல்

கல்வியை RSS கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அவர், RSS கையில் கொஞ்சம் கொஞ்சமாக கல்விமுறை செல்வதாகவும், அப்படி சென்றால் யாருக்கும் வேலை கிடைக்காது எனவும் எச்சரித்தார். வேலையின்மை குறித்து பிரதமர் பேசுவதே இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
Similar News
News November 27, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.
News November 27, 2025
ஆஸ்கர் போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.
News November 27, 2025
ராமதாஸ் கையில் அதிகாரங்கள்: ஸ்ரீகாந்தி

பாமக இரண்டாக பிரிந்து கிடப்பதால், இதுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையில், பாமகவின் அனைத்து அதிகாரங்களும் தனக்குதான் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ள ஸ்ரீகாந்தி, பாமக பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


