News August 15, 2025

அதிமுகவில் துரைமுருகன் இருந்திருந்தால்.. EPS பேச்சு

image

எந்தவித போராட்டங்களிலும் கலந்துகொள்ளாமல் நேரடியாக அரசியலுக்கு வந்த உதயநிதி, இன்று DCM-ஆக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். வேலூர் பரப்புரையில் பேசிய அவர், துரைமுருகனும் மிசாவில் இருந்தவர்தான், அவருக்கு ஏன் உயர் பொறுப்பு கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். ஆனால், துரைமுருகன் அதிமுகவில் இருந்திருந்தால் அவர் இருக்கும் இடமே வேறு என்றும் அவர் கூறினார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News August 15, 2025

மானியத்துடன் கடன் வேண்டுமா?.. இதை பண்ணுங்க

image

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் மையம் (District Industries Centre – DIC) உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேனேஜரை அணுகி தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெறலாம். நாம் தொடங்கும் தொழிலை பொறுத்து ₹10 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹5 கோடி வரை கடன் பெறலாம். உதாரணமாக, ₹10 லட்சம் கடன் பெற்றால் அதில் மானியமாக ₹3.5 லட்சத்தை அரசே செலுத்தும். SHARE IT

News August 15, 2025

பள்ளியில் ஆபாசப் படம்… மாணவர்கள் அதிர்ச்சி

image

ம.பி.,யில் பள்ளி ஒன்றில் ஆபாசப் படம் காட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையின் LED திரையில் திடீரென ஆபாசப்படம் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது 13 மாணவர்கள் இருந்துள்ளனர். ஒருவர் அதை போனில் ரெக்கார்ட் செய்ய, அது சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. இது 6 மாதங்களுக்கு முன் நடந்ததாகவும், விஷமி ஒருவர் இதை பரப்பியதாகவும் பள்ளி தரப்பில் கூறினாலும், நடந்தது சாதாரண தவறில்லையே?

News August 15, 2025

சாதனை தாய் மறைந்தார்

image

அமேசான் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான ஜெப் பெசோஸின் தாய் ஜாக்கி பெசோஸ்(78) காலமானார். முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, கடைசியாக தான் ஆரம்பித்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் ஜெப் மூட முடிவெடுத்தபோது, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, தங்கள் வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் மகனுக்கு கொடுத்தனர் ஜாக்கி தம்பதி. இன்று உலகை ஆளும் நிறுவனமாக அமேசான் வளர்ந்து நிற்க அதுவே மூலதனமானது.

error: Content is protected !!