News March 12, 2025

வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால் இதை செய்யுங்க..

image

பாம்புகள் கடுமையான வாசனைக்கு மிகவும் பயப்படும் என விலங்கியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பாம்பு வீட்டிற்குள் நுழைந்தால் வினிகர் அல்லது மண்ணெண்ணெய் தெளிக்க அவர்கள் அறிவுறுத்துகின்றனர். கூடுதலாக பூண்டு, எலுமிச்சை, இலவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை தூவினால் பாம்பு தானாகவே வெளியே ஓடிவிடும். அதேபோல், வெப்பநிலை மாற்றங்களுக்கும் அவை பயப்படும் என்பதால், புகையாலும் விரட்டலாம் என்கின்றனர்.

Similar News

News March 12, 2025

3 மொழிகள் படிப்பதால் என்ன தவறு? சுதா மூர்த்தி

image

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், ராஜ்ய சபா எம்பியுமான சுதா மூர்த்தி, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். தனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும் எனவும், அதனால் குழந்தைகள் பல மொழிகளை கற்பது அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு vs தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், அவர் இப்படி கூறியுள்ளார்.

News March 12, 2025

SBI UPI சேவைகள் முடங்கியது

image

நாடு முழுவதும் SBI வங்கியின் UPI சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் இதேபோல வங்கி சேவைகள் முடங்கின. பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பின் சுமூகமானது. அதேபோல, இன்று இரவு 7 மணி முதல் UPI சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கி இப்படி செயல்படலாமா என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு சேவை கிடைக்கிறதா? கமெண்ட்.

News March 12, 2025

83,668 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

image

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) எம்பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், டிஜிட்டல் அரெஸ்டுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகள், 3,962 ஸ்கைப் ஐடிக்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்தால் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!