News February 15, 2025
ICC CT 2025: துபாய் புறப்பட்ட இந்திய அணி

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இத்தொடருக்காக, பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. இதற்காக ரோகித் ஷர்மா தலைமையிலான அணி, மும்பையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றது. விராட் கோலி, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் உடன் சென்றனர்.
Similar News
News December 4, 2025
மத நம்பிக்கையை தடுப்பது நல்லிணக்கமா? கோர்ட்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் உத்தரவிற்கு எதிராக TN அரசின் மேல்முறையீடு வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதை விசாரித்த மதுரை கோர்ட், ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கமாகும் என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீபம் ஏற்றுவதை ஏன் ஒரு தரப்பு தடுக்க வேண்டும் என கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து ஆலோசிக்க சென்றுள்ளனர்.
News December 4, 2025
பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படுமா?

பாமகவும், மாம்பழ சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு டெல்லி HC-ல் நடந்துவருகிறது. பதவிக்காலம் முடிந்தும் அன்புமணியை தலைவர் என ECI அங்கீகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு சொல்கிறது. இதனால், இவ்வழக்கில் தற்போதைக்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. ஒருவேளை தேர்தல் வரை இப்பிரச்னை தொடர்ந்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் எனவும், இது இருதரப்புக்கும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 4, 2025
BREAKING: போஸ்டரை நீக்கினார் செங்கோட்டையன்

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து, நேற்று வெளியிட்ட பதிவை, செங்கோட்டையன் நீக்கியுள்ளார். குறிப்பாக, தவெக கொள்கை தலைவர்கள் உடன் எம்ஜிஆர், ஜெ., புகைப்படமும் இருந்தது. இதனையடுத்து, தவெக கொள்கை தலைவர் ஜெ.,வா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது அரசியல் ரீதியாக சர்ச்சையானதை உணர்ந்த KAS, இன்று அந்த போஸ்டரை நீக்கியுள்ளார்.


