News October 21, 2025

பருவமழையை எதிர்கொள்ள IAS அதிகாரிகள் நியமனம்

image

TN-ல் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் விதமாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு IAS அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தமது மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க CM அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News October 22, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 22, ஐப்பசி 5 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்:9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்:7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News October 22, 2025

இந்தியா மீதான பாகிஸ்தான் குற்றச்சாட்டு.. ஆப்கன் பதிலடி

image

ஆப்கன் உடனான மோதலுக்கு இந்தியாவே காரணம் என பாக்., குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது என ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் முகமது யாகூப் மறுத்துள்ளார். இந்தியா உடனான தங்களது நட்பு தொடரும் எனவும், ஆப்கனின் நலன் சார்ந்தே நட்புறவு பேணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பிற நாடுகளுக்கு எதிராக தங்களது பிராந்தியத்தை பயன்படுத்த எப்போது அனுமதிக்கமாட்டோம் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

News October 22, 2025

wwc: மழையால் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்

image

மகளிர் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் விளையாடிய தெ.ஆப்பிரிக்கா 312 ரன்களை குவித்தது. கேப்டன் லாரா வால்வார்ட் 90 ரன்கள் அடித்து அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். ஆனால் மழை குறுக்கிட்டதால், DLS விதிப்படி 20 ஓவர்களில் 234 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைய, 20 ஓவர்களில் 83 ரன்களை மட்டுமே எடுக்க படுதோல்வியடைந்தது.

error: Content is protected !!