News March 14, 2025
எப்போதும் உன்னுடன் இருப்பேன் – KL ராகுல்

IPL தொடரில் டெல்லி கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. அக்சர் படேலை கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்சர் படேலுக்கு, KL ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துகள் பப்பு. புதிய பயணம் சிறப்பாக அமைய எப்போதும் உன்னுடன் இருப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என KL ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.
Similar News
News March 3, 2026
சாதி மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா? அதிமுக

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய திமுக அரசின் அலட்சிய போக்கால், நாங்குநேரியில் கொடூரக் கொலைகள் அரங்கேறியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா எனவும் அவர் சாடியிருக்கிறார்.
News March 3, 2026
இந்திய அணிக்கு ஷாக்: சஞ்சு சாம்சனுக்கு தடையா?

WI-க்கு எதிராக அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. Winning Shot-ஐ அடித்த பிறகு, அவர் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் முன், ஹெல்மெட்டை கழற்றி கிரவுண்டில் வீசினார். இது ICC வீரர்களின் நடத்தை விதி 2.2-ன்(கிரிக்கெட் உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்தால்) கீழ் விதிமீறல் எனப்படுகிறது. தடை விதிக்கப்பட்டால், ENG-க்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் விளையாட முடியாது.
News March 3, 2026
திமுக – காங்., கூட்டணி.. இதுவே கடைசி முயற்சி

திமுக – காங்., இடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்., நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், கார்கே வேண்டுகோளை ஏற்று, குழப்பத்தை சரி செய்ய கடைசி முயற்சியாக செல்வப்பெருந்தகை சிதம்பரம் ஆகியோர் ஸ்டாலினை சற்றுநேரத்தில் சந்திக்கவிருக்கிறார். ஒருவேளை, கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால், எவ்வளவு தொகுதி ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து ஸ்டாலினும் ஆலோசிக்கவிருக்கிறார்.


