News August 24, 2024
ரஜினியின் பேச்சால் வியந்து போனேன்: எம்பி பாராட்டு

‘கலைஞர் என்னும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசியது எல்லோரது மனதையும் தொட்டதாக விசிக எம்பி ரவிக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட என அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதை பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட ரஜினி, அரசியலுக்கு வந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
Similar News
News December 8, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..
News December 8, 2025
போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளையும் அழைத்த பாமக

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வரும் 17-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அன்புமணி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் போராட்டத்தில் பங்கேற்று சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளர்.
News December 8, 2025
WC வெற்றிக்கு அடித்தளமிட்ட பிரதிகாவுக்கு ₹2 கோடி பரிசு

ODI உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் 308 ரன்கள் குவித்த பிரதிகா ராவல், காயம் காரணமாக அரையிறுதி & ஃபைனலில் விளையாடவில்லை. இந்நிலையில், WC-ல் அவர் அளித்த பங்கை கெளரவிக்கும் விதமாக, டெல்லி CM ரேகா குப்தா, பிரதிகாவுக்கு ₹1.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அத்துடன், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பும் (DDCA), பிரதிகாவுக்கு ₹50 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.


