News August 24, 2024
ரஜினியின் பேச்சால் வியந்து போனேன்: எம்பி பாராட்டு

‘கலைஞர் என்னும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசியது எல்லோரது மனதையும் தொட்டதாக விசிக எம்பி ரவிக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட என அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதை பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட ரஜினி, அரசியலுக்கு வந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2026
விஜய்க்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? திருமா பதில்

வரும் தேர்தலில் விஜய் எதிர்க்கட்சியாக அமர வாய்ப்புள்ளதாக <<19316817>>ஜோதிமணி <<>>கூறியிருந்தார். இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, அது ஜோதிமணியின் கருத்து; மக்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும் என பதில் அளித்தார். மேலும், விஜய்க்கு ஊடக வெளிச்சம் அதிகமாக இருப்பதாகவும், TN அரசியலையே அவர் தலைகீழாக மாற்றப்போகிறார் என்ற அளவுக்கு திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாகவும் திருமா கூறியுள்ளார்.
News March 7, 2026
மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

‘ஹெல்த் கான்ஷியஸ்’ என்ற பெயரில் சிலர் மதுவில் டயட் சோடாவை கலந்து குடிப்பார்கள். ஆனால், இது ஆபத்தை ஏற்படுத்தும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அதாவது, சாதாரண சோடாவை கலந்து குடிப்பவர்களை விட, டயட் சோடா கலந்து மது அருந்துவோரின் ரத்தத்தில் மிக விரைவாக ஆல்கஹால் கலந்து மிதமிஞ்சிய போதையை ஏற்படுத்தி விடுகிறதாம். டயட் சோடாவில் சர்க்கரை குறைவாக இருப்பதால், ரத்தம் விரைவாக ஆல்கஹாலை உறிஞ்சி விடுகிறதாம்.
News March 7, 2026
T20 WC: நாளை வருண் விளையாடுவாரா?

வருண் சக்ரவர்த்தி நாளை நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், வருணின் ஃபார்ம் பற்றி தங்களுக்கு கவலையில்லை; நம்பர் 1 பவுலரான அவருக்கு அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்று தெரியும் என்று கூறினார். மேலும், லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து நாளை தெரியவரும் என்றார்.


