News October 12, 2025

சாதி பெயரால் தான் சிலரை தெரியும்: கோவி செழியன்

image

தெருக்கள், ஊர்கள், நீர்நிலைகள் ஆகியவற்றில் உள்ள சாதி பெயர்களை நீக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், இந்த அறிவிப்பிற்கு பிறகே ‘ஜி;டி.நாயுடு’ என்ற பெயரில் CM ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்துவைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், சாதிப் பெயரால் தான் சிலரை அடையாளம் காண முடியும் என அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

Similar News

News October 12, 2025

தீவிரவாதிகளின் புகலிடமாக பாக்., உள்ளது: தாலிபன் அரசு

image

ஆப்கன் அமைச்சர் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், பாக்., – ஆப்கன் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் இருநாட்டு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாக்.,கின் கைபர் பக்துன்வா, பலூசிஸ்தான் மாகாணங்களில் ISIS தீவிரவாத மையங்கள் செயல்படுவதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாக்., உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News October 12, 2025

நாளை முதல் பள்ளிகளில் தீபாவளி விழிப்புணர்வு

image

தீபாவளியையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். நாளை முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. SHARE IT

News October 12, 2025

வரலாற்று கதையில் தனுஷ்

image

தனுஷுடனான படத்தை முடித்த பிறகே இன்பநிதியை, மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதை மாரி உறுதி செய்துள்ளார். தனுஷை வைத்து இயக்கும் இப்படம் வரலாற்று ரீதியான படமாக இருக்கும் எனவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்றும் கூறியுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளுக்காக தனுஷிடம் அனுமதி கேட்டு, சிறந்த முறையில் எழுதி வருவதாகவும் மாரி அப்டேட் கொடுத்துள்ளார். கர்ணன் காம்போ கலக்குமா?

error: Content is protected !!