News December 5, 2024
கதை சொல்லும் திறன் எனக்கில்லை!

தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் திறமை தனக்கு இல்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். பட இயக்கும் வாய்ப்பை பெற்றது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அட்டகத்தி பட ரிலீஸின்போது, தயாரிப்பாளர் CV குமார் பற்றி கேள்விப்பட்டு அவரை முகநூலில் பின் தொடர்ந்து வாய்ப்பு கேட்டேன். அவரிடம் ஸ்கிரிப்ட்டை அளித்தேன். படித்த உடனே படம் தயாரிக்க சம்மதம் சொன்னார்” என நெகிழ்ச்சியோடு கூறினார்.
Similar News
News December 5, 2025
சங் பரிவார் அமைப்புகளுக்கு பா.ரஞ்சித் எச்சரிக்கை

தமிழகத்தில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ப்பை பாஜகவும், அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக உருவாக்கி வந்ததாக பா.ரஞ்சித் குற்றஞ்சாட்டியுள்ளார். பன்முகத்தன்மையை பாஜக, சங் பரிவார் அமைப்புகள் சிதைக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்த அமைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
News December 5, 2025
எறும்புகளுக்கு சர்க்கரை நோய் வரலையே எப்படி?

சொல்லப்போனால் மனிதர்களை விட எறும்புகள்தான் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகின்றன. ஆனால் அவற்றுக்கு சர்க்கரை நோய் வருவதே இல்லை. காரணம், அவற்றின் உடல் அமைப்பு சர்க்கரையை உடனுக்குடன் குளுக்கோஸாக மாற்றி எனர்ஜியாக கன்வர்ட் செய்கிறது. இந்த எனர்ஜியை பயன்படுத்தியே எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கின்றன. தேவைக்கேற்ப சர்க்கரை எடுத்துக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கினால் நமக்கும் பிரச்னை இல்லை. SHARE.
News December 5, 2025
டெல்லி வரை சென்றும் வாய் திறக்காத விஜய்

சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தீவிரமாகியுள்ளது திருப்பரங்குன்றம் விவகாரம். ஆனால், இதுவரை விஜய்யின் தவெக தரப்பில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருப்பது பேசுபொருளாகியுள்ளது. பொதுக்கூட்ட பணியில் பிஸியாக இருக்கும் தவெக தலைமை, தமிழகத்தின் தற்போதைய சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்குமா என்பதே விர்ச்சுவல் வாரியர்ஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?


