News April 2, 2024
ஊழல்வாதிகளால் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளேன்

அடுத்த பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் மீது வலுவான தாக்குதல் நடைபெறும் என மோடி கூறியுள்ளார். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை என்ற அவர், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யவே பொறுப்புக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். ஊழல்வாதிகள் தன்னை மிரட்டுவதோடு, அவதூறு செய்வதாக வருத்தப்பட்ட அவர், புதிய ஆட்சியில் ஊழல்வாதிகள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று உறுதியளித்தார்.
Similar News
News January 20, 2026
அமைச்சர் KN நேருவுக்கு புதிய சிக்கல்!

அமைச்சர் <<18786820>>KN நேரு<<>> மீது ஏற்கனவே டெண்டர், வேலைநியமன ஊழல் புகார்கள் உள்ளன. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக ₹1 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறி ED, TN அரசு மற்றும் DGP-யிடம் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சுமார் 340 அதிகாரிகளின் இடமாற்றத்தில், ₹365 கோடி வரை பணமோசடி நடந்துள்ளதாக ஆதாரங்களை இணைத்துள்ள ED, உடனே FIR பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.
News January 20, 2026
அவையில் கவர்னர் அவமதிக்கப்பட்டாரா?

பேரவையில் கவர்னர் ரவியின் மைக்கை பலமுறை ஆப் செய்து அவமதித்ததாக மக்கள் பவன் கூறியுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் TN அரசு தயாரித்த அறிக்கையில் உள்ளதாக கூறிய மக்கள் பவன், TN அரசு ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல் இடம்பெற்றுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், முதலீடுகளில் TN 4-வதில் இருந்து 6-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
மக்கள் நாயகன் காலமானார்

இயற்கை ஆர்வலர் ராதேஷ்யாம் கோயங்கா(84) உடல்நலக்குறைவால் காலமானார். அசாமை சேர்ந்த இவருக்கு மரங்களின் நண்பன் என்ற பெயரும் உண்டு. திப்ருகர், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து பசுமை புரட்சி செய்தார். தொழில் பொறுப்புகளை மகனிடம் ஒப்படைத்துவிட்டு,’கிரீன் திப்ருகர்’ உருவாக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரது மறைவால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


