News April 2, 2024

ஊழல்வாதிகளால் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளேன்

image

அடுத்த பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் மீது வலுவான தாக்குதல் நடைபெறும் என மோடி கூறியுள்ளார். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை என்ற அவர், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யவே பொறுப்புக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். ஊழல்வாதிகள் தன்னை மிரட்டுவதோடு, அவதூறு செய்வதாக வருத்தப்பட்ட அவர், புதிய ஆட்சியில் ஊழல்வாதிகள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று உறுதியளித்தார்.

Similar News

News October 31, 2025

இன்று இரவு 12 மணி முதல் மொத்தமாக மாறுகிறது

image

நீங்க FASTag யூஸ் பண்ணுறீங்களா? இன்றிரவு 12 முதல் ரூல்ஸ் மொத்தமாக மாறுகிறது. வாகனத்தின் KYV( Know Your Vehicle) அப்டேட்டை இன்றைக்குள் முடிக்காவிடில் உங்களது FASTag செயலிழந்துவிடும். அதன்பின், நீங்கள் டோல் கட்டணத்தை பணமாக இருமடங்கு செலுத்த நேரிடும். வங்கியின் வலைதளம் (அ) மொபைல் செயலியில் எளிதாக KYV அப்டேட் செய்யலாம். தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து OTP மூலம் செயல்முறையை முடிக்கலாம். SHARE IT

News October 31, 2025

உலகக்கோப்பையை வென்றதா இந்திய மகளிர் அணி?

image

Women’s WC-ல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதாக SM-ல் தவறான தகவல் பரவுகிறது. நவ.2-ம் தேதி ஃபைனல் நடக்கவுள்ள நிலையில், விக்கிபீடியாவில் சிலர் எடிட் ஆப்ஷனை பயன்படுத்தி இந்தியா முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் குவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். இலக்கை துரத்திய SA அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்ததாக, பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் யார் ஜெயிப்பாங்க?

News October 31, 2025

செங்கோட்டையனை நீக்க இதுவே காரணம்!

image

கழகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் செங்கோட்டையன் செயல்பட்டதாக கூறி அவரை அதிமுகவில் இருந்து EPS நீக்கியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைக்கக்கூடாது என தெரிந்தும், செங்கோட்டையன் அவர்களுடன் ஒன்றிணைந்து கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு உண்டாக்கியதாக EPS தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்டது.

error: Content is protected !!