News September 8, 2025

கட்சியிலிருந்து நீக்கம்; மல்லை சத்யா ரியாக்‌ஷன்

image

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர், இதுபற்றி தான் கவலைப்படவில்லை; வைகோதான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வைகோ தனது மகன் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News September 8, 2025

DGP நியமன நடைமுறை என்ன?

image

தற்போதைய DGP பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன், DGP அந்தஸ்துக்கு தகுதியான காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு UPSC-க்கு அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் தகுதி, அவர்களின் சேவை உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு, தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசுக்கு UPSC பரிந்துரைக்கும். பின்னர் மாநில முதல்வரின் தலைமையிலான குழு பரிந்துரையை ஆய்வு செய்து இறுதியாக DGP-ஐ நியமனம் செய்யும்.

News September 8, 2025

தவறாக பேசினால் ஆசிட் ஊற்றுவேன்: TMC தலைவர்

image

வாங்காள மக்களை வெளிநாட்டினர் என சித்தரித்தால் பாஜக MLA வாயில் ஆசிட் ஊற்றுவேன் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹீம் பஷி பேசியுள்ளார். மேற்கு வங்காலத்திருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் என பாஜக MLA ஷங்கர் கோஷ் தெரிவித்த கருத்துக்கு, பதிலடியாக இந்த எச்சரிக்கையை அவர் கொடுத்துள்ளார். பஷியின் கருத்துக்கு BJP-வும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

News September 8, 2025

BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (செப்.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. TN-ல் அதிகபட்சமாக விருதுநகர் கோவிலன்குளம், அருப்புக்கோட்டையில் தலா 7CM மழையும், புதுக்கோட்டை, நாகுடி, மணமேல்குடி, அரிமளம், கீரனூரில் தலா 7CM மழையும் பதிவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழையா?

error: Content is protected !!