News February 16, 2025
பிச்சை கேட்கவில்லை: அன்பில் மகேஷ்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல், அந்த நிதியை TNக்கு தரமாட்டோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், எம்மிடமிருந்து பறித்துக் கொண்டதை கேட்கிறோம்; பிச்சையல்ல என X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல. இழந்ததை கேட்கிறோம் இரவல் பொருளல்ல என, Ex CM அண்ணா கூறியதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
Similar News
News December 12, 2025
ஈரோடு கலெக்டர் எச்சரிக்கை!

ஈரோடு ஆட்சியா் பெயரில் முகநூலில் போலி கணக்குகள் பதிவு செய்து தவறான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவருகிறது. இவ்வாறு ஆட்சியா் பெயரில் செயல்படும் போலியான முகநூல் கணக்குகளை பொதுமக்கள் யாரும் நம்பி பணம் வழங்க வேண்டாம். ஆட்சியா் பெயரில் தவறான,சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை தெரிவித்தார்.
News December 12, 2025
ரஜினிக்கு பிறந்தநாள்: கமல், EPS வாழ்த்து!

75 ஆண்டுகால தனிச்சிறப்பான வாழ்வும், 50 ஆண்டுகால லெஜண்டரி சினிமா கரீயரும் கொண்ட நண்பரே, ஹேப்பி பர்த்டே என கமல் ரஜினியை வாழ்த்தியுள்ளார். அதேபோல, அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என EPS வாழ்த்தியுள்ளார். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News December 12, 2025
BREAKING: செங்கோட்டையன் உறுதி செய்தார்

ஈரோடு, விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் வரும் 18-ம் தேதி விஜய்யின் பரப்புரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பரப்புரை நடைபெறவுள்ள இடம் <<18537715>>HRCE-ன் கீழ் உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது<<>> என கலெக்டர், SP-க்கு அத்துறையின் அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


