News August 16, 2025

தோனி நீக்கியதால் ஓய்வு பெற முடிவெடுத்தேன்: சேவாக்

image

2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக். ஆனால், 2008-09 காமன்வெல்த் போட்டிகளின்போது தோனி தன்னை அணியில் இருந்து நீக்கியபோதே ஓய்வை அறிவிக்க நினைத்ததாக சேவாக் கூறியுள்ளார். ஆனால், அப்போது சச்சினிடம் இதுகுறித்து ஆலோசித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறியதாகவும், அதன்பிறகு கோப்பை வென்ற 2011 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்று நல்ல ஸ்கோர் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

பிரிவினை பற்றிய பாடம்.. தேசிய அரசியலில் கொதிநிலை

image

6 – 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் நாட்டு பிரிவினை பற்றிய புது தொகுதியை NCERT அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பிரிவினை கலவரங்களுக்கு ஜின்னா, காங்., மவுண்ட்பேட்டன் மூவரும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டை பிரிக்க வேண்டும் என 1938-ல் ஹிந்து மகாசபா தான் முதலில் வலியுறுத்தியதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொய் தகவலை கூறும் இப்புத்தகங்களை கொளுத்த வேண்டும் என்றும் சாடியுள்ளது.

News August 16, 2025

இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்!

image

ரொம்ப நேரம் நியூஸ் படிச்சி டயர்டான உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம் வாங்க. மேலே உள்ள படத்தை பாருங்க. 6-க்கும், 3-க்கும் இடையில் என்ன நம்பர் வரும் என்று கரெக்ட்டா சொல்லுங்க. பாக்க கஷ்டமா இருந்தாலும், இது ரொம்ப ஈசி. மற்ற நம்பர்களை பாருங்க. உங்களுக்கு பதில் தெரியும். பார்ப்போம் எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்க என.

News August 16, 2025

அமலாக்கத்துறையிடம் ஐ.பி., சொன்ன விஷயம்..

image

திமுகவின் சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் ED ரெய்டு நடந்து வருகிறது. வீட்டிற்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.பி., பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென்மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது. தேர்தல் வேலையை முடக்கவே இந்த ரெய்டு. முடங்கி போகமாட்டேன். என்ன செய்யணுமோ செய்யுங்க” என அதிகாரிகளிடம் ஐ.பி., கூறியுள்ளதாக தகவல்.

error: Content is protected !!