News August 16, 2025

தோனி நீக்கியதால் ஓய்வு பெற முடிவெடுத்தேன்: சேவாக்

image

2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக். ஆனால், 2008-09 காமன்வெல்த் போட்டிகளின்போது தோனி தன்னை அணியில் இருந்து நீக்கியபோதே ஓய்வை அறிவிக்க நினைத்ததாக சேவாக் கூறியுள்ளார். ஆனால், அப்போது சச்சினிடம் இதுகுறித்து ஆலோசித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறியதாகவும், அதன்பிறகு கோப்பை வென்ற 2011 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்று நல்ல ஸ்கோர் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

image

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 3, 2026

9 ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்த பாஜக

image

வரும் 16-ம் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலையொட்டி, 9 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிஹாரில் இருந்து <<19289207>>தேசிய தலைவர் நிதின் நபின்<<>> மற்றும் சிவேஷ் குமார் ஆகியோரை கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. அதேபோல், தேராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் (அசாம்), லட்சுமி வர்மா(சத்தீஸ்கர்), சஞ்சய் பாட்டியா (ஹரியானா), மன்மோகன் சமல், சுஜீத் குமார்(ஒடிசா), ராகுல் சின்ஹா(மேற்கு வங்கம்) ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.

News March 3, 2026

BREAKING: சிறப்பு நிதி ₹10,000.. அறிவித்தார் ஸ்டாலின்

image

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது, அவர்களது ஊதியம் ₹12,500-ல் இருந்து ₹15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு நிதியாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ₹10,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 – 27-ம் ஆண்டு தொடர் செலவினமாக ₹44.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE

error: Content is protected !!