News March 21, 2024
பலத்தை நிரூபிக்க நானே களமிறங்குகிறேன்

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “15க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. நானே களத்தில் நின்று தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க போகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன்” என்றார்.
Similar News
News October 23, 2025
CINEMA ROUNDUP: OTTக்கு வந்த அதர்வா படம்

*ரஷ்மிகாவின் ‘தம்மா’ படம் முதல்நாள் இந்தியாவில் ₹25.11 கோடி வசூல்
*துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தின் ‘கண்மணி நீ’ பாடல் வெளியானது
*சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்
*OTT-யில் வெளியானது அதர்வாவின் ‘தணல்’
*விஷ்னு விஷாலின் 25-வது படத்தை ‘லெவன்’ படத்தை இயக்கிய லோகேஷ் அஜ்லீஸ் இயக்கவுள்ளதாக தகவல்
News October 23, 2025
மழையில் பாழாகும் நெல் மூட்டைகள்… யார் பொறுப்பு?

கொள்முதலுக்கு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. விவசாயிகள் கடன்பட்டு அறுவடை செய்ததை மழையில் இருந்து காப்பாற்ற ஒரு பாதுகாப்பான கிடங்கை கூட அரசால் கட்ட முடியாதா? ஒவ்வொரு கிடங்கிலும் 10,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றனவாம். பசி போக்கும் உணவை பாதுகாக்க முடியவில்லை எனில், மாடல் ஆட்சிகளாலும், வல்லரசு பெருமையாலும் என்ன பயன் என மக்கள் கேட்கின்றனர்.
News October 23, 2025
CSK-வில் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK திட்டமிட்டுள்ளது. குஜராத் அணியும் ₹3.2 கோடிக்கு சுந்தரை டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை சரியாக குஜராத்தால் பயன்படுத்த முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் CSK-வுக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.