News April 17, 2025
நான் ரஜினியின் சிஷ்யன் : நெகிழும் உபேந்திரா

கூலி படத்தில் நடிக்க லோகேஷ் என்னிடம் வந்து கதையை கூறினார். நான் எதுவும் கேட்கவில்லை. ரஜினி சார் பக்கத்தில் நின்றாலே போதும் என்றேன் என நடிகர் உபேந்திரா தெரிவித்துள்ளார். மேலும், நான் ஏகலைவன், ரஜினி சார் எனக்கு துரோணாச்சாரியார் போன்றவர். அவரை அந்த அளவுக்கு ஃபோலோ பண்றேன். அவருடைய படத்தில நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
கரூர் துயரம்.. விஜய் சிக்குகிறாரா?

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிப்புரத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் விசாரித்த அதிகாரிகளின் அடுத்த குறி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம். நாளை அங்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணை வளையத்திற்குள் விஜய்யும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையை விஜய் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
News November 2, 2025
உலகக்கோப்பை ஃபைனல்: இந்தியா பேட்டிங்

மகளிர் ODI கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழை காரணமாக டாஸ் போட தாமதமான நிலையில், தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே லீக் போட்டியில் தோற்றதற்கு, இன்றைய ஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணியை பழிதீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
News November 2, 2025
அவருக்காக கையை வெட்டிக் கொள்ளவும் ரெடி: பிரியா மணி

மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தால், அதற்காக தன் கையை வெட்டிக் கொள்ளவும் ரெடியாக இருப்பதாக நடிகை பிரியா மணி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்தில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் மணிரத்னம் தனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் எனக் கூறியுள்ள அவர், மணிரத்னம் படத்தில் நடிப்பது ஆசிர்வாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


