News March 12, 2025
நிழலோடு யுத்தம் செய்யும் பழக்கம் இல்லை: சேகர்பாபு

தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக நடக்கும் போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி வழங்குவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அனுமதி வாங்காமல் தவெக போராட்டம் நடத்திவிட்டு கைது செய்வதாக கூறுவதை எப்படி ஏற்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை-சீமான் சந்திப்பு தொடர்பாக பதிலளித்த அவர், இருவரும் நிழலோடு யுத்தம் செய்கிறார்கள், ஆனால் திமுக நிஜத்தோடு யுத்தம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 28, 2026
தமிழகத்தில் மொத்தம் எத்தனை கட்சிகள் உள்ளன தெரியுமா?

தமிழகத்தில் 307 கட்சிகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட்டில் தெரிவித்திருந்தது. இதில் திமுக, அதிமுக, காங்., பாஜக, தேமுதிக, நாதக, விசிக, CPM, CPI, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், விசிக ஆகிய 12 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக 295 கட்சிகள் உள்ளன. தவெக, பாமக, அமமுக போன்றவை இந்த லிஸ்ட்டில்தான் உள்ளன.
News March 28, 2026
விஜய்யிடம் கூட்டணி பேசவில்லை: அமித்ஷா

NDA கூட்டணியில் இணைய வேண்டும் என விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுத்ததாக பேசப்பட்டது. அதனை முற்றிலுமாக மறுத்துள்ள அமித்ஷா, விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்தை நடத்த முயற்சிக்க கூட இல்லை என கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு தவெக வந்தால், தங்களது வாக்கு வங்கியிலேயே அது எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என தனக்கு தோன்றியதாக அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
4 லிட்டர் பெட்ரோலை பதுக்கியவருக்கு ஜெயில்

மேற்காசிய போர் நெருக்கடியால் இலங்கை கடுமையான எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு 4 லிட்டர் பெட்ரோலை பதுக்கி வைத்து, கள்ளச் சந்தையில் விற்க முயன்றவருக்கு ₹1,000 அபராதமும், 3 வார சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. <<19404464>>இலங்கையில் <<>>தற்போது, பெட்ரோல், டீசல் போன்றவை ரேஷன் முறையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.


