News August 18, 2024

மனதளவில் தயாரானேன்.. ஆனால்?: நீரஜ்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு மனதளவில் தயாரானாலும், உடல் ரீதியான தயார்படுத்தலில் கொஞ்சம் போதாமை இருந்ததாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். தன்னால் முடியாது என எப்போதும் நினைத்ததில்லை எனவும், தன்னுடைய அனைத்து முயற்சிகளும் அன்று வீணானதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆக.22ஆம் தேதி தொடங்கும் லாசன்னே டைமண்ட் லீக் தொடரில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News November 25, 2025

Ro-Ko இல்லாததால் தள்ளாடுகிறதா இந்தியா?

image

தற்போது கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்திய அணியின் இந்த நிலைக்கு, கோச் கம்பீரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதில் மற்றுமொரு பரிமாணமும் உள்ளது. ரோஹித், கோலி ஆகியோர் இருந்திருந்தால், சொந்த மண்ணில் இந்திய அணி இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என சில நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News November 25, 2025

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உயரிய விருது

image

சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை’ விருதினை அன்பில் மகேஸ் பெறுகிறார். உ.பி.,யின் லக்னோவில் நாளை (நவ.26) நடைபெறும் 19-வது தேசிய ஜாம்போரி விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இவ்விருதை அவருக்கு வழங்கவுள்ளார். TN சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக இருக்கும் அன்பில், இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

News November 25, 2025

விவசாயிகளின் கவலையை புரியாத திமுக: R.B. உதயகுமார்

image

விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், EPS நீலிக்கண்ணீர் வடிப்பதாக CM ஸ்டாலினின் விமர்சனத்திற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். விவசாயிகளின் கண்ணீர், கவலையை புரிந்துகொள்ளாத அரசாக திமுக இருக்கிறது என்று சாடிய அவர், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிகொடுத்துவிட்டு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் என்றும் தனது குறைகளை மறைக்கவே EPS-ஐ <<18374909>>ஸ்டாலின் <<>>விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

error: Content is protected !!