News September 28, 2025

விவரிக்க முடியா துயரில் உள்ளேன்: ஸ்டாலின்

image

கரூர் அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்களுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த CM ஸ்டாலின் விபரிக்க முடியாத துயரத்தில் உள்ளதாக கூறினார். அரசியல் கட்சிக் கூட்டத்தில் இதுவரை இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறவில்லை என கூறிய அவர் இனிமேலும் இதுபோல் நடக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார். காயமடைந்தவர் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை எனவும் தெரிவித்தார்

Similar News

News September 28, 2025

நவராத்திரி 7-ம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்!

image

நவராத்திரியின் கடைசி 3 நாள்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். இன்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் லம் லஷ்மியை நம
காயத்ரி: ஓம் மஹாதேவ்யைச் வித்மஹே
விஷ்ணு பத்யைசதீமஹி
தன்னோ லஷ்மி பிரசோதயாத்
பொருள்:
சர்வ உலகங்களின் தாயாகிய மகாலட்சுமியை நாம் தியானிக்கிறோம், மகாவிஷ்ணுவின் பத்தினியான அந்த லக்ஷ்மி தேவி எங்கள் அறிவை ஒளிரச் செய்யட்டும். SHARE.

News September 28, 2025

WhatsApp-க்கு போட்டியாக வந்தது ‘ARATTAI’

image

வாஸ்ட்ஆப் வந்தபின், SMS மறந்தேவிட்டது. அந்த அளவுக்கு மக்களின் போன்களில் அது இடம்பிடித்துவிட்டது. இந்நிலையில், இந்தியாவின் ZOHO நிறுவனம் அரட்டை (Arattai) என்ற மெசேஜிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. வீக் சிக்னலிலும் தடையின்றி செயல்படும், பேசிக் ஸ்மார்ட்போன்களில் கூட வேலை செய்யும், சிறந்த செயல்பாடு இதன் சிறப்பம்சங்களாக கூறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய செயலியான இது, வாட்ஸ்ஆப்பை வெல்லுமா?

News September 28, 2025

9-வது முறை கோப்பையை தூக்குமா இந்தியா?

image

ஆசிய கோப்பையின் பைனலில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதுவரை இந்தியா 8 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பை வென்றுள்ளன. நடப்பு தொடரில் தோல்வியே பெறாத அணி என்ற பெருமையுடன் இந்தியா உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ஏற்ற இறக்கங்களுக்கு பிறகே பைனலுக்கு சென்றது. இந்தியாவுக்கே சாதகமான சூழல் இருந்தாலும், இலங்கையுடன் ஏற்பட்ட தடுமாற்றத்தை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

error: Content is protected !!