News September 18, 2025
₹3.5 கோடி கடனில் இருக்கிறேன்: அண்ணாமலை

தனக்கு ₹3.5 கோடி கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொந்தமாக சம்பாதித்து விவசாய நிலம் வாங்கினால் கூட விளக்கம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிக விலைக்கே வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலம் வாங்கிய விஷயத்தில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அண்ணாமலை, வேண்டுமென்றால் திமுக அரசு DVAC அனுப்பி சோதனை நடத்தட்டும் என்று சவால் விடுத்தார்.
Similar News
News March 3, 2026
மார்ச் 6-ல் அதிமுக தொகுதிப்பங்கீடு அறிவிப்பா?

யாருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்குவது, தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை குறித்து நாளை அதிமுக மா.செ.க்களின் கருத்துகளை EPS கேட்கவிருக்கிறார். ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடியும் நிலையில், யாருக்கு MP பதவி வழங்குவது என 4-ம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும், மார்ச் 6-ம் தேதி தொகுதிப்பங்கீட்டு பட்டியல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News March 3, 2026
மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல முத்திரைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வேறு மாநில அரசு நாட்டிலேயே நிச்சயமாக இருக்க முடியாது என்று CM ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுபோன்ற திட்டங்களை சிறிய குளறுபடி இல்லாமல் சரியாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, உயர்த்தப்பட்ட தொகை ₹2,000, திமுக ஆட்சி அமைந்தால் ஜூனில் இருந்து வரவு வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறாரா விஜய்?

தஞ்சையில் நாளை தவெக நிர்வாகிகளை விஜய் சந்திக்கவிருக்கும் நிலையில், தற்போது தேர்தல் அறிக்கைக் குழுவுடன் புஸ்ஸி ஆனந்த் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளையை நிர்வாகிகள் சந்திப்பின்போது தவெகவின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, திமுகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது


