News April 6, 2025
ராமேஸ்வரம் வர ஆவலுடன் காத்திருக்கிறேன்: மோடி

ராம நவமி நாளான இன்று நண்பகல் 12 மணியளவில் ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதுகுறித்து அவர், அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள். பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும். நமது அனைத்து முயற்சிகளில் நம்மை வழிநடத்தும்; இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
BREAKING: அதிமுக எம்எல்ஏ கொலை.. பரபரப்பு தீர்ப்பு

2005-ல் கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கும்பலில் 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விவரம் நவ.24-ல் தெரிவிக்கப்படும் என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படமாகும்.
News November 21, 2025
ஆன்மிக செல்வந்தர்களாக இருக்க வேண்டும்: AR ரஹ்மான்

உங்கள் ஈகோ போய்விட்டால், நீங்கள் கடவுளை போல வெளிப்படையானவராக மாறுகிறீர்கள் என AR ரஹ்மான் கூறியுள்ளார். சூஃபியிசம் பற்றி பேசிய அவர், உங்களின் சுயத்தை மறைக்கும் காமம், பேராசை, பொறாமை, முன்முடிவு என அனைத்தும் இறக்க வேண்டும் என்றார். நாம் அனைவரும் ஆன்மிக ரீதியாக செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்ற ரஹ்மான், ஆன்மிக செல்வம் வரும்போது, பொருள் செல்வம் பின்தொடரும் என்றும் கூறினார்.
News November 21, 2025
இந்திய போர் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு

துபாய் ஏர் ஷோவில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்ததாக IAF அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விமானியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் IAF தெரிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரிக்க விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. துபாயில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


