News April 6, 2025
ராமேஸ்வரம் வர ஆவலுடன் காத்திருக்கிறேன்: மோடி

ராம நவமி நாளான இன்று நண்பகல் 12 மணியளவில் ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதுகுறித்து அவர், அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள். பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும். நமது அனைத்து முயற்சிகளில் நம்மை வழிநடத்தும்; இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News January 10, 2026
மூலிகை: மூட்டுவலியை நீக்கும் சித்தரத்தை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, ➤சித்தரத்தையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும். ➤மூச்சுத்திணறலுக்கு அதிமதுரம், திப்பிலியை சித்தரத்தையுடன் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். ➤உலர்ந்த சித்தரத்தை & அமுக்கரா கிழங்கை தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் மூட்டுவலி நீங்கும். ➤சித்தரத்தையை உலர்த்தி, நீரில் கொதிக்கவைத்து பருகினால், வறட்டு இருமல் தணியும். SHARE IT.
News January 10, 2026
தேர்தலில் புதியவருக்கு வாய்ப்பா? அண்ணாமலை

அரசியல் என்பது ஒரு படத்தின் மூலம் தீர்மானிக்கப்படும் விஷயமல்ல என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தலில் புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என இங்கி, பாங்கி போட்டு பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். திமுகவை அகற்ற வேண்டும் என முடிவெடுத்த பிறகு, ஆட்சியில் யார் அமர்ந்தால் அவர்களுக்கு ஆட்சி கொடுக்க தெரியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 10, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசித்த காந்தியவாதி மா.வன்னிக்காளையின் (92) சுவாசம் நின்றுபோனது. உடல் தகனம் செய்யப்பட்டாலும், அவரது கருத்துகளும், போதனைகளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்துக்கொண்டே இருக்கும். ஜனாதிபதியின் தேசிய விருது, தமிழக கவர்னரின் சிறந்த காந்தியவாதி விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவருக்கு நம்முடைய ஆத்மார்த்தமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


