News April 6, 2025
ராமேஸ்வரம் வர ஆவலுடன் காத்திருக்கிறேன்: மோடி

ராம நவமி நாளான இன்று நண்பகல் 12 மணியளவில் ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதுகுறித்து அவர், அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள். பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும். நமது அனைத்து முயற்சிகளில் நம்மை வழிநடத்தும்; இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 29, 2025
கிருஷ்ணகிரி: விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு

காவேரிப்பட்டணத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு நேற்று (டிச.29) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில செயலாளர் முத்து மற்றும் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தில் மத்திய அரசின் பெயர் திருத்த மசோதா மற்றும் பலவற்றை குறித்து உரையாடப்பட்டது.
News December 29, 2025
நீரிழிவு நோயா? இந்த பழங்களை சாப்பிடுங்க!

நீரிழிவு நோயாளிகள் பழங்களை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால், Low GI (Low Glycemic Index) கொண்ட, அதாவது ரத்த சர்க்கரையை குறைந்த அளவில் உயர்த்தும், அதிக நார்ச்சத்து உள்ள பழங்கள் சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். அத்தகைய பழங்கள் என்னென்ன என்பதை அறிய மேலே உள்ள படங்களை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு தெரிந்த வேறு பழம் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.
News December 29, 2025
நான் சாதிக்கு எதிரானவன்: மாரி செல்வராஜ்

சிவகாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் பேசி கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் விசிலடித்தும் கைதட்டியும் ஆரவாரம் செய்தனர். அப்போது, இந்த கொண்டாட்டங்கள் அனைத்துமே சாதிக்கு எதிரானதாக இருந்தால் தான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று மாரி கூறினார். எதிர்காலத்தில், ஒருவேளை அரசியல் கட்சி (அ) அமைப்பை தொடங்கினாலும் தான் என்றைக்கும் சாதிக்கு எதிராகவே செயல்படுவேன் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.


