News March 18, 2024

தமிழகத்தில் இருந்து போட்டியிடுகிறேன்

image

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்த தமிழிசை, மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடவில்லை, தமிழகத்தில் இருந்து போட்டியிட உள்ளதாக கூறினார். மேலும், எந்த தொகுதி என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News

News December 29, 2025

ஷங்கர், ஹெச்.வினோத்துக்கு தூது விட்டாரா STR?

image

மாநாடு வெற்றிக்குப் பிறகு, சறுக்கல்களை சந்தித்து வரும் STR, ‘அரசன்’ படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குநர்களுடன் இணைய முடிவு செய்துள்ளாராம். அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹெச்.வினோத், ஷங்கர் ஆகியோரிடமும் தூது அனுப்பப்பட்டுள்ளதாம். இதற்கிடையில், அஸ்வத் மாரிமுத்து படமும் வெயிட்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 29, 2025

எந்த காளையை அடக்கினார் கருணாநிதி? சீமான்

image

தமிழ் சங்கம் நடத்திய பாண்டித்துரைதேவரின் பெயரை மதுரை நூலகத்திற்கு ஏன் வைக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்ற அவர், காளை வளர்த்தாரா அல்லது அடக்கி காயம் பட்டாரா என கேட்டுள்ளார். மேலும், மதுரை மைதானத்திற்கு கருணாநிதி பெயருக்கு பதிலாக மூக்கையாதேவர் பெயரை வைத்திருக்கலாமே எனவும், எங்கள் அடையாளங்களை நிறுவுவதில் என்ன தவறு என்றும் பேசியுள்ளார்.

News December 29, 2025

திரிபுரா இனவெறிக்கொலை: 5 பேர் கைது

image

திரிபுராவை சேர்ந்த அஞ்சல் சக்மா (24) என்ற பழங்குடியின மாணவரை, சீனர் என கூறி போதை கும்பல் கத்தியால் குத்தினர். இதில் சிகிச்சையில் இருந்த அஞ்சல் 18 நாள்களாக சிகிச்சையில் இருந்த அஞ்சல் உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்நிலையில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திப்ரா மோத்ரா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!