News March 18, 2024

பிரியாணி தலைநகராக மாறிய ஐதராபாத்

image

இந்தியாவின் பிரியாணி தலைநகரமாக ஐதராபாத் நகரம் உருவெடுத்துள்ளதாக, ஸ்விக்கி (Swiggy) நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டில் (2023) ஐதராபாத்தில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 1 கோடி பிரியாணி ஆர்டர்களுடன் பெங்களூரு 2ஆவது இடத்திலும், 50 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் சென்னை 3ஆவது இடத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது.

Similar News

News September 9, 2025

ஆசிய கோப்பை தொடர் பரிசுத்தொகை இவ்வளவா?

image

17-வது ஆசிய கோப்பை தொடர் UAE-ல் இன்று தொடங்குகிறது. துவக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தியா, தனது முதல் போட்டியில் UAE உடன் நாளை மோதுகிறது. இத்தொடருக்கான பரிசுத்தொகை விவரம் வெளியாகியுள்ளது. கோப்பை வெல்லும் அணிக்கு ₹2.6 கோடி, Runner-up அணிக்கு ₹1.3 கோடியும் வழங்கப்படவுள்ளது. தொடரின் நாயகன் விருதாளருக்கு ₹12.5 லட்சம் பரிசுத்தொகையாக அளிக்கப்பட இருக்கிறது.

News September 9, 2025

GALLERY: ஆசிய கோப்பையும் அபார ரெக்கார்டுகளும்!

image

ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியுள்ள, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தான் இதுவரை பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மாவின் மாஸ் ரெக்கார்டில் தொடங்கி, யாரும் நெருங்க முடியாத பாகிஸ்தானின் மிக மோசமான ரெகார்ட் வரை பலவற்றையும் மேலே கொடுத்துள்ளோம். அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்க Swipe செய்யவும்.

News September 9, 2025

தவெகவை கண்டு பயத்தின் உச்சியில் திமுக: விஜய்

image

திருச்சியில் N. ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெகவை கண்டு திமுக பயத்தின் உச்சியில் இருப்பதாக கூறிய அவர், போலீசை ஏவி தவெக செயல்பாட்டை முடக்க நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தூக்கத்தை இழந்து முழு நேரமும் தவெகவை வீழ்த்துவது பற்றியே சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?

error: Content is protected !!