News April 12, 2024
மனைவி, 7 குழந்தைகளை கொன்ற கணவன்

பண நெருக்கடி காரணமாக மனைவி மற்றும் 7 குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் கோகர், போதிய வருமானம் இல்லாததால் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், தனது மனைவி (கவுசர்), 8 முதல் 10 வயதுடைய 4 மகள்கள், 3 மகன்களை கோடரியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
சனிக்கிழமை மட்டும் இந்த தவறை செஞ்சுடாதீங்க

சனிக்கிழமைகளில் சில விஷயங்களை செய்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என ஐதீகங்கள் சொல்கின்றன. சனிக்கிழமையன்று துடைப்பம், எண்ணெய், கத்திரிக்கோல் வாங்கக்கூடாது. அத்துடன், பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். இதனால் உங்கள் செல்வ வளம் குறையும் எனவும், உடல்நலனில் பாதிப்புகள் வரலாம் எனவும் நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் நீங்கள் எப்படி வழிபடுவீங்க?
News November 8, 2025
தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டமன்ற தொகுதி நீக்கமா?

ECI-ன் அதிகாரப்பூர்வ ‘ECINET’ செயலியில் உடுமலை தொகுதி(125) இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்து வருகின்றனர். ஆனால், திருப்பூர் மாவட்ட பட்டியலில் ‘Search your name in voter list’-ல் அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர்(வ), திருப்பூர்(தெ) மட்டுமே உள்ளன.
News November 8, 2025
பெட்டிக் கடைகளில் SIR படிவங்கள் விநியோகம்: அதிமுக

SIR படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் கொடுத்து விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக MP இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். ஆனால், கடைகளில் SIR படிவம் விநியோகம் செய்தால், எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதற்கு பின்னால் DMK இருப்பதாக விமர்சித்துள்ளார்.


