News October 24, 2025
கணவன், மனைவி மகிழ்ச்சியா இருக்க.. இதை கவனிங்க

இன்றைய காலத்தில் குடும்ப உறவுகள் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சண்டை போட்ட 30 நிமிடங்களுக்குள் சமாதானமாகும் தம்பதிகள், ஒன்றாக இருக்கும் வாய்ப்பு 80% அதிகம் இருக்கிறதாம். எனினும் இது சண்டையை தவிர்ப்பது அல்லது, அதிலிருந்து எவ்வளவு விரைவாக மீள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஒரு சிரிப்பு, மென்மையான வார்த்தை அல்லது கட்டிப்பிடித்தல் கூட உறவை காப்பாற்றும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
Similar News
News October 24, 2025
SPORTS ROUNDUP: சாதனை நாயகியாக மாறும் ஸ்மிருதி

*வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ் *புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ் *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரை கைப்பற்றிய வங்கதேசம் *சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த மெக் லானிங் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா *தெற்காசிய தடகள போட்டி ராஞ்சியில் இன்று தொடக்கம்
News October 24, 2025
கலவர வழக்கு: அமைச்சர் சிவசங்கர் விடுதலை

2015-ல் கல்குவாரி உரிமை தொடர்பாக அப்போதைய குன்னம் தொகுதி MLA-வும், இப்போதைய அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலவரம் ஏற்பட்டு காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சிவசங்கர் உள்பட 31 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, சிவசங்கர உட்பட 27 பேரை(4 பேர் இறந்துவிட்டனர்) சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டனர்.
News October 24, 2025
குல்தீப் ஓரங்கட்டப்பட கம்பீர் காரணமா?

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விக்கெட் எடுக்கும் திறமை குல்தீப்புக்கு உண்டு. எனினும் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குல்தீப் அணியில் இருந்தாலும், XI-ல் விளையாடுவது இல்லை. ஆஸி., தொடரில் அக்ஷர், வாஷிங்டன் என 2 ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். பேட்டிங்கிற்கு கம்பீர் கொடுக்கும் முக்கியத்துவமே இதற்கு காரணம் என ரசிகர்கள் SM-ல் குற்றம்சாட்டி வருகின்றனர்.


