News November 21, 2024
மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ வாய்ப்பு

மருத்துவத்துறை அபரிமிதமாக வளர்ந்து வரும் சூழலில், மனிதர்களின் வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அடுத்த சில ஆண்டுகளில் மனிதர்கள் 120 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்டெம் செல் ஆராய்ச்சி வெற்றி பெறும்பட்சத்தில் இந்த நூற்றாண்டின் இறுதியில் மனிதர்கள் 150 வயது வரை வாழ்வார்கள் என டாக்டர் எர்ன்ஸ்ட் வான் ஸ்வார்ஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
Similar News
News August 15, 2025
ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திர தினம் அல்ல..

*Liechtenstein 1940-ல் ஜெர்மன் குடியரசில் இருந்து பிரிந்ததை National day-வாக கொண்டாடுகிறது.
*வட மற்றும் தென் கொரியா நாடுகள், 1945-ல் ஜப்பானில் இருந்து விடுதலை பெற்றதை, Liberation day-வாக கொண்டாடுகின்றன.
*1960-ல் பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை காங்கோ குடியரசு National day-வாக கொண்டாடுகிறது.
*பஹ்ரைன் 1971-ல் பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் தினமாக கொண்டாடுகிறது.
News August 15, 2025
விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு: CM

விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை ₹22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ₹15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தியாகிகள், போராளிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டதாகவும் சுதந்திர தின உரையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
11 நிமிடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை.. செயலியால் அசத்தல்

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள, பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 11 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அவசரம் 108 செயலியில் உங்களின் இருப்பிடத்தை உறுதிபடுத்தி தகவல் கொடுத்தால், விரைவாக சேவை கிடைக்குமாம். அவசர தேவைக்கு பயன்படுத்திகோங்க..