News August 7, 2024
நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை மலையில் இருந்து கீழே இறக்க கூடாது என திருநெல்வேலியை சேர்ந்த வன ஆர்வலர் முத்துராமன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து புகாரில் உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News September 18, 2025
அம்பையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஊதிய தாமதத்தைக் கண்டித்து (செப். 17) அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி ஆணையர் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தி, அன்றே ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இனி ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்ததால், பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
News September 17, 2025
நெல்லை: விஷவாயு தாக்கி ஒருவர் பலி..!

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
நெல்லை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <