News August 7, 2024
நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை மலையில் இருந்து கீழே இறக்க கூடாது என திருநெல்வேலியை சேர்ந்த வன ஆர்வலர் முத்துராமன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து புகாரில் உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News December 4, 2025
மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (டிச.3) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விவரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News December 3, 2025
நெல்லை: ரூ.5 லட்சம், 1 பவுன் தங்கம் வேண்டுமா? ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இந்த விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கமும் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கு விருது பெற தகுதி உள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News December 3, 2025
திருநெல்வேலி இனி அல்வா மட்டும் இல்ல!

பாரம்பரியமிக்க பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்து வருகிறது. இந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தயாரிக்கப்படும் மரச்செப்பு பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகாரம் வழங்கி உள்ளது. குழந்தைகள் விளையாட்டு மர செப்பு பொருட்கள் இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இனி திருநெல்வேலினா அல்வா மட்டும் இல்ல; மேலும் ஒரு சிறப்பு இருக்கு. *ஷேர் பண்ணுங்க


