News April 24, 2025

இந்தியா எப்படி தாக்குதல் நடத்தும்? (1/2)

image

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், 2 வழிகளில் தாக்குதல் நடத்தலாம் என ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். 1)எல்லையை (LOC) கடந்து தாக்குவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாக்., ஆக்கிரமித்துள்ள POK காஷ்மீரை கைப்பற்றலாம். இதன்மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் (சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து). 2) நவீன ஏவுகணைகள் மூலம் துல்லிய தாக்குதல். (பார்க்க பகுதி-2)

Similar News

News November 25, 2025

சற்றுமுன்: விடுமுறை.. வந்தது HAPPY NEWS

image

கார்த்திகை மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு டிச.3 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த விழாவிற்காக தமிழக அரசு ஏற்கெனவே சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், டிச.3, 4-ல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தி.மலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

News November 25, 2025

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா?

image

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பது தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

News November 25, 2025

காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ

image

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை TN அரசு நிறைவேற்ற மறுப்பதாக ஜாக்டோ ஜியோ சாடியுள்ளது. இந்நிலையில் டிச.11, டிச.12-ல் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டமும், சென்னையில் டிச.27-ல் வேலைநிறுத்த மாநாடும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!