News March 26, 2025
இரானி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து 100 சிசிடிவிக்கள் ஆய்வு செய்யப்பட்டதாக கமிஷனர் அருண் கூறியுள்ளார். பிடிபட்ட 3 குற்றவாளிகளும் ‘இரானி கொள்ளையர்கள்’ மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் திறமையானவர்கள் என்றார். நகைகள், பைக்கை பறிமுதல் செய்ய சென்றபோது தப்பிக்க முயன்றதால் <<15888455>>ஜாபரை<<>> சுட்டதாகக் கூறிய அவர், 26 சவரன் நகை, துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார்.
Similar News
News March 29, 2025
இந்தியர்களிடம் எவ்வளவு தங்கம் உள்ளது தெரியுமா?

சில நாடுகளின் ரிசர்வ் வங்கியை விட இந்தியர்கள் அதிக தங்கம் வைத்திருப்பதாக HSBC global தெரிவித்துள்ளது. சுமார் 25 ஆயிர டன்களுக்கும் அதிகமான தங்கத்தை இந்தியர்கள் வைத்துள்ளனராம். இவற்றின் மதிப்பு ₹150 லட்சம் கோடி. இது, இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாடுகளின் ரிசர்வ் பேங்குகளில் இருக்கும் மொத்த தங்கத்தையும் விட பல மடங்கு அதிகமாம். எப்படி வாங்குறாங்களோ?
News March 29, 2025
தோனியை கேலி செய்த சேவாக்

RCBக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 9வது வீரராக களமிறங்கிய எம்.எஸ்.தோனியை, வீரேந்திர சேவாக் கிண்டல் செய்துள்ளார். ரொம்ப சீக்கிரமாகவே பேட்டிங்கிற்கு தோனி வந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக 19 அல்லது 20வது ஓவர் வரும் தோனி ஏன் 16ஆவது ஓவரில் வந்தார் என கமெண்ட் அடித்துள்ளார். அதனுடன் தோனி வேகமாக வந்தாரா? இல்லை விக்கெட் அவ்வளவு வேகமாக விழுந்ததா? எனவும் நையாண்டி செய்துள்ளார்.
News March 29, 2025
கஞ்சா வியாபாரி என்கவுண்ட்டரில் கொலை

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வாரம் காவலர் முத்துக்குமரன் கஞ்சா வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியபோது, பொன்வண்ணன் அவரை கல்லால் அடித்துக் கொன்றார். இதனையடுத்து, கம்பம் அருகே காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.