News November 30, 2024

யானைகளை பராமரிப்பது எப்படி? TN அரசு உத்தரவு

image

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி 2 பேர் பலியானதன் எதிரொலியாக, யானைகள் பராமரிப்பு தொடர்பாக கோயில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், பக்தர்கள், மது அருந்தியவரை யானை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. செஃல்பி எடுக்க அனுமதிக்கக் கூடாது, தர்மம் பெற அழைத்து செல்லக் கூடாது. பட்டாசு வெடிக்கும் இடத்துக்கு அழைத்து செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News August 23, 2025

அனைவரும் தூய்மை பணிக்கு வர வேண்டும்: திருமாவளவன்

image

அனைத்து சமூகத்தினரும் தூய்மை பணி செய்ய முன்வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில், பணியின்போது மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், வரலட்சுமியின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும் சென்னையில் விரைவாக மின்சார கேபிள்களை புதை வடிவில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

News August 23, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு வழங்குவது உறுதி?

image

<<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000 <<>>வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

அமித் ஷாவுடன் CP ராதாகிருஷ்ணன் சந்திப்பு

image

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் CP ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, CP ராதாகிருஷ்ணன் அனுபவமிக்க தலைவர் எனவும் நிர்வாகத் திறன் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஆர் தேச நலனுக்காக அளப்பரிய தொண்டாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!