News July 28, 2024
பும்ரா ஓவரில் ரன்களை குவிப்பது எப்படி? ஜெயசூர்யா

பும்ரா உலகின் மிகவும் தனித்துவமான பவுலர் என இலங்கையின் பயிற்சியாளர் ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளார். பும்ராவின் திறமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்ற அவர், அவரால் சிறப்பாக செயல்பட முடியாத நாள்களை பேட்டர்கள் பயன்படுத்தி ரன்களை குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களை காட்டிலும் பவுலர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாக சிந்திப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News July 4, 2025
ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான் காலமானார்

ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான பீட்டர் ரூஃபாய் (61) உடல்நலக் குறைவால் காலமானார். உலகின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக நைஜீரியா அணியை உருவாக்கிய இவர், அதன் கேப்டனாகவும், சிறந்த கோல் கீப்பராகவும் செயல்பட்டார். 17 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடிய இவர், ஆப்பிரிக்க கோப்பையை நைஜீரியா வெல்ல காரணமாக இருந்தார். இவர் தலைமையில் தான், அந்த அணி முதன் முதலாக உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது.
News July 4, 2025
14,582 காலியிடங்கள்… இன்றே கடைசி!

SSC ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கு (CGL) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 14,582 பணியிடங்களுக்கு இந்த தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பித்தபின் திருத்தங்களை ஜூலை 9-11 தேதிகளுக்குள் முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 13 முதல் 30 வரை Tier-1 தேர்வும், டிசம்பரில் Tier-2 தேர்வும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <
News July 4, 2025
’பாபநாசம் படத்தில் ரஜினி நடிக்கயிருந்தது’: ஜித்து ஜோசப்

மலையாளத்தில் மிக ஹிட்டான படம் த்ரிஷ்யம். இது தமிழில் பாபநாசம் எனும் பெயரில் ரீமேக்கானது. இப்படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினி இந்த படத்தை பார்த்துவிட்டு நடிக்க ஆர்வமாக இருந்தார், காவல்துறையினர் தன்னை தாக்கும் காட்சிகளை மக்கள் ஏற்பார்களா என்ற ஐயம் அவருக்கு இருந்ததாக தெரிவித்தார். ஆனால் கமல் படம் பார்த்தவுடன் சம்மதம் தெரிவித்துவிட்டார் எனவும் கூறினார்.